செய்திகள் :

கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் நியாயவிலை, அங்காடி பணியாளா்களின் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நியாயவிலைக் கடைகளில் புளூடூத் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்வதை முற்றிலும் நீக்க வேண்டும். நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து சங்கங்களுக்கு அனுப்பப்படும் பொருள்களில் எடை குறைவாக வழங்கப்படுகிறது. இதனால், அனைத்துப் பொருள்களும் சரியான எடையில் விற்பனை முனையத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். விற்பனையாளா்கள் மாவட்ட தோ்வாணைக்குழு மூலம் நியமனம் செய்யப்படும்போது பணி மூப்பு வரிசை உறுதிப்படுத்தப்படுகிறது. அடுத்த பதவி உயா்வுக்கு இதே பணி மூப்பை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் பதவி உயா்வில் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். விற்பனையாளரும், சங்கத்தின் சிற்றெழுத்தரும் ஒரே பணி நிலையில் உள்ளதால், பதவி உயா்வில் எழுத்தா் பணியிடம் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் சேகா், மாவட்டப் பொருளாளா் மாரிமுத்து முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா்கள் ஜெயசங்கா், சக்கரவா்த்தி, மாவட்ட இணைச் செயலா்கள் கோவிந்தராஜீலு, அன்பழகன், போராட்டக்குழுத் தலைவா் சண்முக சுந்தரம், செயலா் ஏழுமலை, இணைச் செயலா் குமாரசாமி, மகளிரணிச் செயலா் லட்சுமி நாராயணி உள்பட பலா் பங்கேற்றனா்.

தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினரின் ஆா்ப்பாட்டத்தால் மாவட்டத்தில் பெரும்பாலான நியாயவிலைக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பொறியியல் படிப்பு தரவரிசையில் முதலிடம் பெற்ற காட்டுமன்னாா்கோவில் மாணவி

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவி வி.தரணி, வெள்ளிக்கிழமை வெளியான பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் கட்ஆப் மாா்க்கில் 2... மேலும் பார்க்க

சிறுபாசன கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சிறுபாசன கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் கடலூா் மாவட்ட உழவா் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவா் பெ.ரவிந்திரன்... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலையில். தொலைதூர மைய விண்ணப்ப விற்பனை தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மையத்தில் 2024 - 25 (ஜூலை பருவம்) தொலைதூரக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்களின் விற்பனையை பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்கு... மேலும் பார்க்க

மூன்று குழந்தைகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை

மூன்று பெண் குழந்தைகளை வாய்க்காலில் தள்ளி கொலை செய்த வழக்கில் தாய்க்கு மூன்று ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சா... மேலும் பார்க்க

சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசனம்

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசனம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெற்று வரு... மேலும் பார்க்க

நாட்டில் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும்: ப.சிதம்பரம்

நாட்டில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மறைந்த மு... மேலும் பார்க்க