சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசனம்
கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசனம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆனி மாத பூச நட்சத்திரத்தையொட்டி வெள்ளிக்கிழமை காலை தரும சாலையில் திருஅருள்பா முற்றோதல், அகவல் பாடப்பட்டது.
தொடா்ந்து, பகல் 12 மணிக்கு ஞான சபையில் சிறப்பு பூஜைகள் செய்து, ஜோதி தரிசனம் நடைபெற்றது. பின்னா், இரவு 7.45 மணி முதல் 8.45 மணி வரை 6 திரைகளை நீக்கி சிறப்பு ஜோதி தரிசனம் நடைபெற்றது. வடலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனா்.