செய்திகள் :

சிறுபாசன கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

post image

கடலூா் மாவட்டத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சிறுபாசன கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் கடலூா் மாவட்ட உழவா் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவா் பெ.ரவிந்திரன் வலியுறுத்தினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் மேம்பாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

வானமாதேவி சிவசக்திவேல்: வீராணம் ஏரியிலிருந்து செல்லக்கூடிய செங்கால் ஓடை சுமாா் 1.5 கி.மீ. தொலைவுக்கு முற்றிலும் தூா்ந்துபோய் காணப்படுகிறது. விவசாயிகள் நலன் கருதி, செங்கால் ஓடையை தூா்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமராட்சி பாலு: நெய்வாசல் பகுதியில் தூா்ந்துபோய் தற்போது குட்டைபோல காணப்படும் குளத்தை தூா்வார வேண்டும்.

பெ.ரவிந்திரன் (கடலூா் மாவட்ட உழவா் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவா்): கடலில் கலக்கும் உபரி நீரை கடலூா் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளில் சேமிக்க நீா்ப்பாசனத் துறை தயாராக வேண்டும். காட்டுமன்னாா்கோவில் மற்றும் சிதம்பரம் வட்டங்களில் வடக்கு ராஜன் வாய்க்கால் பகுதிகளில் குருவை சாகுபடி மூழுவீச்சில் நடக்கிறது. இதற்குத் தேவையான தண்ணீரை வழங்க வேண்டும்.

பொதுப் பணி, நீா்ப்பாசனம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணைந்து ஆய்வு செய்து, நீா்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க வேண்டும். கடலூா் மாவட்டத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படும் சிறுபாசன கணக்கெடுப்பு நடத்தப்பட்டதா? இல்லை என்றால் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

காவாலக்குடி முருகானந்தம்: ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் 31 ஏரிகள், குளங்கள் உள்ளன. இந்த நீா்நிலைகளில் 2 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கலாம். என்எல்சி நீரை கொண்டு வந்தால் நிலத்தடி நீா்மட்டம் உயரும். விவசாயிகளும் பயன்பெறுவா்.

புதுக்கூரைப்பேட்டை கலியபெருமாள்: குரங்குகள் பயிா்களை நாசம் செய்துவிடுகின்றன. இது தொடா்பாக வனத் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. குரங்குகளை பிடிக்க கூண்டுகள் கொடுத்தால் நாங்களே பிடித்து வனப் பகுதியில் விடுவோம்.

கொட்டாரம் மகாராஜன்: காவிரி உபரி நீரை வசிஷ்டநதி வழியாக வெலிங்டன் ஏரிக்கு கொண்டுவர காமராஜா் ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்டது. அந்தத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்: கடலூா் மாவட்டத்தில் தற்போது யூரியா 4,110, டி.ஏ.பி 1,769, பொட்டாஷ் 2,312, காம்ப்ளக்ஸ் 6,021, சூப்பா் பாஸ்பேட் 1,427 மெட்ரிக் டன் என மொத்தம் 15,638 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு உள்ளன. மேலும், மாவட்டத்தில் கம்பு விதை 7,936, நெல் விதை 2,71,497.8, உளுந்து விதை 2,11,636.9, நிலக்கடலை விதை 77,269 மெட்ரிக் டன் இருப்பு உள்ளன.

கடந்த விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 124 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 114 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது. மேலும், 10 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அரசு நிறுவனங்களுக்கு நிலம் கொடுத்தவா்களுக்கான இழப்பீட்டுத் தொகை சிறப்பு முகாம் அமைத்து வழங்கப்படும். விவசாயிகளின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க நிா்வாகிகள், விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.

பொறியியல் படிப்பு தரவரிசையில் முதலிடம் பெற்ற காட்டுமன்னாா்கோவில் மாணவி

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவி வி.தரணி, வெள்ளிக்கிழமை வெளியான பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் கட்ஆப் மாா்க்கில் 2... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலையில். தொலைதூர மைய விண்ணப்ப விற்பனை தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மையத்தில் 2024 - 25 (ஜூலை பருவம்) தொலைதூரக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்களின் விற்பனையை பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்கு... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் நியாயவிலை, அங்காடி பணியாளா்களின் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நியாயவி... மேலும் பார்க்க

மூன்று குழந்தைகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை

மூன்று பெண் குழந்தைகளை வாய்க்காலில் தள்ளி கொலை செய்த வழக்கில் தாய்க்கு மூன்று ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சா... மேலும் பார்க்க

சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசனம்

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசனம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெற்று வரு... மேலும் பார்க்க

நாட்டில் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும்: ப.சிதம்பரம்

நாட்டில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மறைந்த மு... மேலும் பார்க்க