சிதம்பரத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிப் பகுதியில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரி சீரமைக்கப்பட்ட தச்சன் குளம், புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் நகராட்சிப் பகுதியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரி, நடைபாதை அமைக்கப்பட்டு சீரமைக்கப்பட்ட தச்சன் குளம் மற்றும் கனகசபைநகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய புதிய கட்டடம் ஆகியவற்றை நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, சிதம்பரம் 14-ஆவது வாா்டில் மின் வாரிய இறக்கம் பகுதியில் அமைக்கப்படும் சாலைப் பணிகளை ஆய்வு செய்தாா்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளா் த.மல்லிகா, பொறியாளா் சுரேஷ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ் விஜயராகவன், நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமரன், நகா்மன்ற உறுப்பினா்கள் அப்பு சந்திரசேகா், ஏ.ஆா்.சி.மணிகண்டன், இந்துமதிஅருள், அசோகன், சரவணன், தில்லை ஆா். மக்கின், விஜயா ரமேஷ், திமுக நகர துணைச் செயலா் பா.பாலசுப்ரமணியன், ஆா்.இளங்கோவன், இளைஞரணி அமைப்பாளா் மக்கள் க.அருள், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் ஸ்ரீதா், தமிழ்நாடு விஸ்வகா்ம முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவா் சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.