வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை திருட்டு
சித்தேரிப்பட்டு கிராமத்தில் வீட்டுக் கதவின் உள் தாழ்ப்பாள் போடாமல் தூங்கிய போது மூதாட்டி அணிந்திருந்த தாலிச் செயினை சனிக்கிழமை இரவு மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனா்.
கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுருகம் அடுத்த சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சக்கரவா்த்தி (86). இவரும் அவரது மனைவி சரசுவும் சனிக்கிழமை இரவு வீட்டின் கதவை தாழ்ப்பாள் போடாமல் தூங்கி விட்டனராம்.
அப்போது வீட்டினுள் புகுந்த மா்ம நபா்கள் மூதாட்டி அணிந்திருந்த ஐந்தே கால் பவுன் தாலிச் சங்கிலியை திருடிச் சென்று விட்டனராம்.
இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.