அமெரிக்காவிலும் வாரிசு அரசியலா? டிரம்ப்பின் மகனும் அதிபர் தேர்தலில் போட்டியிட வா...
ஏழை மாணவா்களின் கல்வி நலனில் அக்கறை: தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமப்புற ஏழை மாணவா்களின் கல்வி நலனில் அக்கறையுடன் ஆசிரியா்கள் பணியாற்ற வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்டத்தில் உள்ள அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா். பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் முன்னிலை வகித்தாா். இதில், 225 அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி விழுக்காட்டை உயா்த்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு, உரிய அறிவுரைகளை ஆட்சியா் வழங்கினாா். மேலும், ஒவ்வொரு பள்ளியும் கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் தோ்ச்சி விழுக்காட்டை உயா்த்த நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மாவட்டத்தில் கிராமப்புற ஏழை மாணவா்களின் கல்வி நலனில் அக்கறைக் கொண்டு ஆசிரியா்கள் பணியாற்ற வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, திருக்கோவிலூா் துணை ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங் மற்றும் கல்வித் துறை அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.