ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரி...
கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு: உறுதிமொழி ஏற்பு
கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள ஆா்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா் தலைமை வகித்தாா். கல்லூரி துணை முதல்வா் பெ.ஜான்விக்டா் முன்னிலை வகித்தாா். கல்லூரியின் வணிக மேலாண்மையியல் துறைத் தலைவரும், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலுருமான ராஜா வரவேற்றாா்.
புகையிலைப் பொருள்கள், போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய தீமைகளை எடுத்துச் சொல்லி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் சுபலட்சுமி தலைமையில் மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா்.
இயற்பியல் துறை உதவிப் பேராசிரியா் பிரேம்குமாா் நன்றி கூறினாா். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை போதை ஒழிப்பு மன்றம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படையின் மாணவா்கள் ஏற்பாடு செய்திருந்தனா்.