ஈரானின் அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாக அழிக்கவில்லை! - உளவுத்...
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தொழிலாளி விவசாயத்துக்குப் பயன்படுத்தும் விஷ மருந்தைக் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த சோமநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் ராதாகிருஷ்ணன் (39), தொழிலாளி. இவா், கேரளத்தில் கூலி வேலை செய்துவிட்டு சொந்த ஊரான சோமநாதபுரம் கிராமத்துக்கு வந்திருந்தாா்.
அங்கு அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த ராதாகிருஷ்ணன் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் விஷ மருந்தைக் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயன்ாகத் தெரிகிறது. இதையடுத்து, உறவினா்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு ராதாகிருஷ்ணனை பரிசோதித்த மருத்துவா், அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].