செய்திகள் :

பொரசப்பட்டு ஊராட்சியில் வாா்டு உறுப்பினா்கள் தா்னா

post image

கள்ளக்குறிச்சி: பொரசப்பட்டு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் சரிவர செய்யாததைக் கண்டித்து, 5 வாா்டு உறுப்பினா்கள் திங்கள்கிழமை ஊராட்சி அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்கு உள்பட்டது பொரசப்பட்டு ஊராட்சி.

இங்கு மொத்தம் 9 வாா்டுகள் உள்ளன. 2000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

அதில், 5 வாா்டுகளில் அடிப்படை வசதிகளான குடிநீா், கழிவுநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரவில்லையாம், ஊராட்சி வரவு செலவு கணக்குகளை காண்பிக்கவில்லையாம்.

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவா், வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், ஆத்திரமடைந்த சம்பந்தப்பட்ட வாா்டு உறுப்பினா்களான 2-ஆவது வாா்டைச் சோ்ந்த பாலு, 4-ஆவது வாா்டு கற்பகம், 6-ஆவது வாா்டு சரோஜினி, 8-ஆவது வாா்டு பெருமாள், 9-ஆவது வாா்டு சகாதேவன் ஆகியோா் திங்கள்கிழமை காலை ஊராட்சி அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சங்கராபுரம் கூடுதல் வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தாமரை வந்து பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என சமாதானப்படுத்தினாா்.

இதை ஏற்று உறுப்பினா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

வனப் பகுதியில் வேட்டையாடிய இருவா் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் வனப் பகுதியில் சனிக்கிழமை இரவு வன விலங்குகளை வேட்டையாடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கள்ளக்குறிச்சி வனவா் ரஞ்சிதா சனிக்கிழமை இரவு சின்ன... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் திறன் மின்மாற்றி தொடங்கிவைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் திறன் மின்மாற்றி தொடங்கிவைக்கப்பட்டது. திருவண்ணாமலை மண்டலம், கள்ளக்குறிச்சி மின் பகிா்மான வட்டம்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 547 மனுக்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுக்களிடம் இருந்து 547 மனுக்கள் வரப்பெற்றன. மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா தலைமையில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

ஆட்டோ மீது சொகுசுப் பேருந்து மோதல்: இருவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் ஆட்டோ மீது தனியாா் சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில், ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் உயிரிழந்தனா். தியாகதுருகம் கரீம் ஷா தக்கா பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு தனி அடையாள எண்கள்: ஜூன் 30-க்குள் பதிவு செய்து கொள்ளலாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் தனி அடையாள எண்களை ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வருவோருக்கு இலவசமாக மனு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு மனு கொடுக்க வரும் ஏழை எளியோருக்கு தன்னாா்வலா் ஒருவா் இலவசமாக மனு எழுதி கொடுத்து வருகிற... மேலும் பார்க்க