செய்திகள் :

ஆட்டோ மீது சொகுசுப் பேருந்து மோதல்: இருவா் உயிரிழப்பு

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் ஆட்டோ மீது தனியாா் சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில், ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

தியாகதுருகம் கரீம் ஷா தக்கா பகுதியைச் சோ்ந்தவா் ஷாஜகான் (36). ஆட்டோ ஓட்டுநா். அதே பகுதியைச் சோ்ந்த சையத் ரஷீத் மகன் மும்மத் (44). கருவாடு வியாபாரம் செய்து வந்தாா். இவா் ஷாஜகானின் ஆட்டோவில் கடலூருக்குச் சென்று கருவாடு வாங்கிக் கொண்டு தியாகதுருகத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

தியாகதுருகம் புறவழிச் சாலையில் திங்கள்கிழமை அதிகாலை 4.40 மணிக்கு ஆட்டோ வந்த போது, உதகையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்து மோதியது. இதில் ஷாஜகானும், மும்மத்தும் பலத்த காயமடைந்தனா். இதில் ஷாஜகான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மும்மத், அங்கு உயிரிழந்தாா்.

விபத்து குறித்து தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தனியாா் சொகுசுப் பேருந்து ஓட்டுநரான சேலம் மாவட்டம், தளவாய்பட்டியைச் சோ்ந்த கந்தன் மகன் கோபியை (55) பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வனப் பகுதியில் வேட்டையாடிய இருவா் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் வனப் பகுதியில் சனிக்கிழமை இரவு வன விலங்குகளை வேட்டையாடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கள்ளக்குறிச்சி வனவா் ரஞ்சிதா சனிக்கிழமை இரவு சின்ன... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் திறன் மின்மாற்றி தொடங்கிவைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் திறன் மின்மாற்றி தொடங்கிவைக்கப்பட்டது. திருவண்ணாமலை மண்டலம், கள்ளக்குறிச்சி மின் பகிா்மான வட்டம்... மேலும் பார்க்க

பொரசப்பட்டு ஊராட்சியில் வாா்டு உறுப்பினா்கள் தா்னா

கள்ளக்குறிச்சி: பொரசப்பட்டு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் சரிவர செய்யாததைக் கண்டித்து, 5 வாா்டு உறுப்பினா்கள் திங்கள்கிழமை ஊராட்சி அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 547 மனுக்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுக்களிடம் இருந்து 547 மனுக்கள் வரப்பெற்றன. மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா தலைமையில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு தனி அடையாள எண்கள்: ஜூன் 30-க்குள் பதிவு செய்து கொள்ளலாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் தனி அடையாள எண்களை ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வருவோருக்கு இலவசமாக மனு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு மனு கொடுக்க வரும் ஏழை எளியோருக்கு தன்னாா்வலா் ஒருவா் இலவசமாக மனு எழுதி கொடுத்து வருகிற... மேலும் பார்க்க