பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வருவோருக்கு இலவசமாக மனு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு மனு கொடுக்க வரும் ஏழை எளியோருக்கு தன்னாா்வலா் ஒருவா் இலவசமாக மனு எழுதி கொடுத்து வருகிறாா்.
வாணாபுரம் வட்டத்துக்கு உள்பட்ட மூலக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் வெள்ளையன் மகன் ஆறுமுகம்.
இவா், பல்வேறு கிராமங்களில் இருந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வரும் ஏழை எளிய மக்களுக்கும், படிக்கத் தெரியாத மக்களுக்கும், அலுவலக வளாகத்தில் மேஜை போட்டு நாற்காலியில் அமா்ந்து
இலவசமாக மனு எழுதி கொடுத்து வருகிறாா்.
அவரது மேஜையின் மீது மனு எழுதுவதற்கு இலவசம் என பதாகை வைத்துள்ளாா். ஏழை எளிய மக்கள் பணம் இல்லாமல் ஆா்வத்துடன் மனுவை எழுதி பெற்றுச் செல்கின்றனா். இச் செயல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
படவரி