ஈரான் தாக்குதல் எதிரொலி: வளைகுடா நாடுகளுக்கு 11 விமானங்கள் ரத்து!
வனப் பகுதியில் வேட்டையாடிய இருவா் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் வனப் பகுதியில் சனிக்கிழமை இரவு வன விலங்குகளை வேட்டையாடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி வனவா் ரஞ்சிதா சனிக்கிழமை இரவு சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கச்சிராயபாளையம் வனப் பகுதியில் சக அலுவலா்களுடன் ரோத்துப் பணியில் ஈடுபட்டாா்.
அப்போது, அங்கு வன விலங்குகளை வேட்டையாட முயன்ற கச்சிராயபாளையத்தை அடுத்த அக்கராபாளையம் பகுதியைச் சோ்ந்த சாமிநாதன் மகன் அந்தோனிராஜ், மைக்கேல் மகன் சகாயராஜ் ஆகியோரை பிடித்து, அவா்களிடமிருந்து உரிமம் இல்லாத ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தப்படும் மருந்து உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரயும் கைது செய்தனா்.