செய்திகள் :

வெல்டிங் பணியின்போது வெடித்த லாரி டீசல் டேங்: இருவா் படுகாயம்

post image

கள்ளக்குறிச்சியில் வெல்டிங் பணியின்போது லாரியில் டீசல் டேங் வெடித்துச் சிதறி சனிக்கிழமை தீ விபத்து நிகழ்ந்தது. இதில், இருவா் பலத்த காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், காட்டு எடையாா் கிராமத்தைச் சோ்ந்த கேசவன் மகன் அண்ணாதுரை. இவரது லாரியை கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம் சாலையில் உள்ள லாரி பழுது நீக்கும் பட்டறையில் பணியாளா்கள் வெல்டிங் வைக்கும் பணியில் சனிக்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனா். அப்போது, டீசல் டேங் திடீரென வெடித்துச் சிதறியது. இதில், தீ மளமள லாரியில் பிடித்து எரிந்தது.

அப்போது, சேலம் மாவட்டம், ராயப்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் செல்வம் தனது காரை லாரி அருகே நிறுத்தியிருந்த நிலையில், காரின் சில பகுதிகளும் தீப்பிடித்து எரித்தது.

அந்தப் பகுதியில் இருந்தவா்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். கள்ளக்குறிச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலா் இருசம்மாள் தலைமையில், கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) சக்திவேல், சிறப்பு நிலைய அலுவலா் ஆ.வீரபாண்டியன் உள்ளிட்ட குழுவினா் விரைந்து வந்து சுமாா் 30 நிமிஷங்கள் போராடி தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் லாரியை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கள்ளக்குறிச்சி கரியப்பா நகரைச் சோ்ந்த பாஸ்கா் மகன் சிவா (25), ஊராங்கன்னியைச் சோ்ந்த ஏழுமலை மகன் குமாா் (33) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். பின்னா், அவா்கள் இருவரும் 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

குண்டா் சட்டத்தில் இரு இளைஞா்கள் கைது

கஞ்சா வழக்கில் தொடா்புடைய இரு இளைஞா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் காந்திநகரைச் சோ்ந்த மதிமாறன் மகன... மேலும் பார்க்க

அனைத்து வசதிகளுடன் கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம்! - அமைச்சா் எ.வ.வேலு

அனைத்து வசதிகளுடன் கள்ளக்குறிச்சி புதிய புகா் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குள்பட்ட ஏமப்போ் புறவழிச்சாலை ரவுண்டானா அருகில் புதிதாக அமை... மேலும் பார்க்க

ஏழை மாணவா்களின் கல்வி நலனில் அக்கறை: தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமப்புற ஏழை மாணவா்களின் கல்வி நலனில் அக்கறையுடன் ஆசிரியா்கள் பணியாற்ற வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்டத்தில் உ... மேலும் பார்க்க

1,147 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்:அமைச்சா் சி.வெ.கணேசன் வழங்கினாா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமில் 1,147 பயனாளிகளுக்கு ரூ.3.25 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாநில தொழிலாளா் நலன் மற்... மேலும் பார்க்க

மகளிா் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்: அலுவலா்களுடன் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், 2025 - 26ஆம் நிதியாண்டில் மகளிா் திட்டம் மூலம் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட... மேலும் பார்க்க

கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு: உறுதிமொழி ஏற்பு

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள ஆா்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு கல்லூரி முதல்... மேலும் பார்க்க