செய்திகள் :

``நான் ஒரு தீவிர இந்து; மதச்சார்பற்றவராக இருக்க முடியாது.." - RSS பாணியில் பேசிய அஸ்ஸாம் முதல்வர்!

post image

"சோசலிசம்" மற்றும் "மதச்சார்பின்மை" என்ற சொற்களை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதற்கான "பொற்காலம்" இது என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்திருக்கிறார். 'தி எமர்ஜென்சி டைரீஸ் - இயர்ஸ் தட் ஃபோர்ஜ் எ லீடர்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை அன்று அஸ்ஸாமில் நடந்தது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ``இந்த புத்தகம் அவசரநிலை எதிர்ப்பு இயக்கத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் அனுபவங்களின் தொகுப்பாகும். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் 42-வது திருத்தத்தின் மூலம் "சோசலிசம்" மற்றும் "மதச்சார்பின்மை" என்ற இரண்டு சொற்களைச் சேர்த்ததன் மூலம் அரசியலமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது.

மோடி
மோடி

அவசரநிலை அறிவிக்கப்பட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல அறிவுஜீவிகள் அரசியலமைப்பிலிருந்து சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை என்ற சொற்களை நீக்க இதுவே பொற்காலம் எனக் கூறியுள்ளனர். நாம் ஒரு முதிர்ந்த ஜனநாயகம்.

பிரிட்டிஷ் - அமெரிக்க அரசியலமைப்புகளிலிருந்து மதச்சார்பின்மை என்ற சொற்களை நாம் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. பகவத் கீதையிலிருந்து நமது மதச்சார்பின்மையை எடுத்துக்கொள்வோம்.

நமது அரசியலமைப்பின் பிரிவு 14, 'நாட்டில் யாருக்கும் எதிராக அரசு வேறுபட்ட முறையில் நடத்தப்படக்கூடாது' என்று கூறுகிறது, அதுவே நமது மதச்சார்பின்மையின் அடித்தளமாகும். அதுதான் மதச்சார்பின்மையின் மிக உயர்ந்த நிலை.

பிரதமர் இந்திரா காந்தி அரசியலமைப்பில் மதச்சார்பின்மை என்ற வார்த்தையை அறிமுகப்படுத்திய பிறகு, அது நீதிமன்றங்களாக இருந்தாலும் சரி, அறிவு சார்ந்து இயகுபவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் மேற்கத்திய பார்வையில் மதச்சார்பின்மையைக் காணத் தொடங்கினர்.

ஏனென்றால் மதச்சார்பின்மை என்ற சொல் இந்திய சூழலில் உருவாகவில்லை. எப்போதும் நாம் நடுநிலை வகித்ததில்லை. ஏனென்றால் நாம் இந்துக்களுடன் இருக்கிறோம், முஸ்லிம்களுடனும் இருக்கிறோம். இங்கே, மதச்சார்பின்மை என்பது ஒரு நேர்மறையான கருத்தாகும். நாம் நடுநிலையாக இருந்தால், சத்திரங்களுக்கு (அஸ்ஸாமில் உள்ள வைணவ மடங்கள்), நம்கர்களுக்கு (சமூக பிரார்த்தனை மண்டபங்கள்), கோயில்களுக்கு வேலை செய்ய முடியாது.

ஹிமந்தா பிஸ்வா சர்மா
ஹிமந்தா பிஸ்வா சர்மா

வேதங்களின் விஷயங்களைப் பற்றி விவாதிக்க முடியாது. கீதை பற்றி விவாதிக்க முடியாது. இப்போது, ​​ஹிமந்த பிஸ்வா சர்மா எப்படி மதச்சார்பற்றவராக இருக்க முடியும்?. நான் ஒரு தீவிர இந்து. நான் மதச்சார்பற்றவராக இருக்க முடியாது. இந்து மதத்தில், வசுதைவ குடும்பகம் (உலகம் ஒரு குடும்பம்) என்று எழுதப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு தீவிர இந்துவாக இருந்தால், வசுதைவ குடும்பகம் பற்றி சிந்திக்க வேண்டும்.

அதாவது நமது மதச்சார்பின்மை ஒருபோதும் மேற்கத்திய மதச்சார்பின்மையின் வரையறையால் ஈர்க்கப்படவில்லை. நாம் நடுநிலையானவர்கள் அல்ல. இந்தியா ஒரு ஆன்மீக நாடு என்பதால் நாங்கள் நேர்மறையாக இணைந்திருக்கிறோம். சோசலிசம் ஒருபோதும் இந்திய நாகரிகத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது மகாத்மா காந்தி பேசிய "பொருளாதார இலட்சியங்களான அறங்காவலர்" என்பதன் ஒரு பகுதியாகவோ இருந்ததில்லை. நமது நாகரிகத்தில், எந்தத் தலைவரும் சோசலிசம் பற்றிப் பேசவில்லை.

அது மோதலை அடிப்படையாகக் கொண்ட ஒரு சித்தாந்தம். அதனால்தான், மற்ற நாடுகளுடனான போட்டியில் நாம் பின்தங்கியுள்ளோம். அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட இந்த சோசலிசத்தை பா.ஜ.க அகற்ற வேண்டியதில்லை. பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோருடன் சேர்ந்து காங்கிரஸ் அதை ஏற்கெனவே அழித்து, நமது பொருளாதாரத்தில் தாராளமயமாக்கலைக் கொண்டு வந்துவிட்டது. பிரதமர் மோடியும், அடல் பிஹாரி வாஜ்பாயும் இந்த தாராளமயமாக்கல் தத்துவத்தை மேலும் எடுத்துச் சென்றிருக்கின்றனர்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே
ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே

இதற்கு முன்னர் ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே, ``அவசரநிலையின் போது காங்கிரஸ் அரசால் முகவுரையில் சேர்க்கப்பட்ட 'சோசலிஸ்ட்' மற்றும் 'மதச்சார்பற்ற' என்ற சொற்கள் நீடிக்க வேண்டுமா? அதை நீக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனப் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

``பயிற்சி, ஊக்கம் கொடுத்தால் ஆப்பிள் சாகுபடியில் வருவாய் ஈட்ட முடியும்'' -கொடைக்கானல் விவசாயி சாதனை

கொடைக்கானல் கவுஞ்சி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி தன்னுடைய நிலத்தில் ஆப்பிள், குங்குமபூ போன்றவற்றை நட்டு வைத்து 3 வருட காலம் பராமரித்து தற்போது ஆப்பிள் சாகுபடி செய்வதற்கு தயாராக உள்ளார். ஜம்மு காஷ்மீரின்... மேலும் பார்க்க

MP: `90 டிகிரியில் திரும்பும் அபாயகரமான மேம்பாலம்' -கடும் எதிர்ப்பால் 7 பொறியாளர்கள் பணியிடை நீக்கம்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலங்கள் கட்டுவது வழக்கம். ஆனால் அந்த மேம்பாலங்கள் சில நேரங்களில் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாமல் கட்டிவிடுவார்கள். அது போன்ற ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தி... மேலும் பார்க்க

திருப்புவனம் லாக்கப் மரணம்: ``பணியிடைநீக்கம் மட்டுமே நீதியா? கொலை வழக்கு பதியாதது ஏன்?'' - சீமான்

கடந்த 4 ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட காவல்துறை விசாரணை மரணங்கள் நடைபெற்றுள்ள நிலையில், அம்மரணங்களுக்கு உரிய நீதி இதுவரை கிடைத்தப்பாடில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: இந்தி திணிப்பு வாபஸ்; ரத்து செய்யப்பட்ட தாக்கரே சகோதரர்கள் பேரணி.. பின்னணி என்ன?

மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5-வது வகுப்பு வரை மூன்றாவது மொழியாக இந்தி கற்றுக்கொடுக்கப்படும் என்றும், அது இந்த ஆண்டே நடைமுறைக்கு வரும் என்றும் அரசாணை பிறப்பித்து இருந்தது. இதற்கு எதிர்க்கட்... மேலும் பார்க்க

`பாஜக-வுடன் கூட்டணி வைத்தது ஏன்?' - கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தொடங்கிவிட்டன. அதன் அடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக-வின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்... மேலும் பார்க்க

Maharashtra: ``மும்மொழிக் கொள்கை ரத்து" - பாஜக அரசு 'யு டர்ன்' ஏன்?

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் திருத்தப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்துள்ளது அந்த மாநில பாஜக தலைமையிலான அரசு. எதிர்காலத்தில் மொழிக்கொள்கையை எப்படி செயல்படுத்... மேலும் பார்க்க