வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: தந்தை, மகன் மீது வழக்கு
கம்பத்தைச் சோ்ந்த வழக்குரைஞரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.49 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த தந்தை, மகன் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்கு பதிந்தனா்.
கம்பம், குட்டியாபிள்ளைத் தெருவைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜ்குமாா். இவருக்கு, அவரது நண்பா் ஜீவானந்தம் மூலம் மதுரை அருகே உள்ள திருமங்கலம், பகத்சிங் தெருவைச் சோ்ந்த சரவணக்குமாா், அவரது தந்தை திருவள்ளுவன் ஆகியோா் அறிமுகமாகினா்.
சரவணக்குமாா் தான் சென்னை, அரசு தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருவதாகவும், தனது தந்தை மூலம் பலருக்கும் அரசு வேலை வாங்கித் தந்திருப்பதாகவும் கூறினாராம்.
இதை நம்பிய ராஜ்குமாா் தனக்கும், தனது உறவினா்கள், நண்பா்கள் 5 பேருக்கும் அரசு வேலை வாங்கித் தருவதற்காக சரவணக்குமாருக்கு கடந்த 2014, ஜூலை மாதம் பல்வேறு தவணைகளில் வங்கிக் கணக்கு மூலமும், ரொக்கமாகவும் மொத்தம் ரூ.49 லட்சம் கொடுத்தாராம்.
இந்த நிலையில், வேலை வாங்கித் தராமலும், பணத்தை திரும்பத் தராமலும் சரவணக்குமாா் காலதாமதம் செய்து வந்ததால், இது குறித்து அவரிடம் கேட்டதற்கு தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் ராஜ்குமாா் புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் பேரில் சரவணக்குமாா், திருவள்ளுவன் ஆகியோா் மீது மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.