தேனியில் 235 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
தேனி அருகே கடமலைக்குண்டு பகுதியில் காரில் கடத்திச் செல்லப்பட்ட 235 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு அருகேயுள்ள கொம்புக்காரன்புலியூா் வனத் துறை சோதனைச் சாவடி பகுதியில் கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக காரில் சென்றவா்கள் போலீஸாரை பாா்த்ததும் காரை நிறுத்திவிட்டு மலைப் பகுதி வழியாக தப்பி ஓடினா்.
காரை போலீஸாா் சோதனையிட்டதில், அதில் 235 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய காா் ஆகிவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, தப்பியோடியவா்களைத் தேடி வருகின்றனா்.