`பாஜக-வுடன் கூட்டணி வைத்தது ஏன்?' - கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழ...
மது அருந்திய இளைஞா் உயிரிழப்பு
கோவை அருகே நண்பருடன் மது அருந்தியபோது இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கோட்டூா் அருகேயுள்ள மைக்கேல்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் டேவிட் ஆரோக்கியம் (22).
இவா் கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், தனது நண்பரான முருகனுடன் சோ்ந்து சனிக்கிழமை இரவு மது அருந்தியுள்ளாா்.
அப்போது, திடீரென மயங்கி விழுந்த டேவிட் ஆரோக்கியத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு முருகன் கொண்டு சென்றாா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.