`பாஜக-வுடன் கூட்டணி வைத்தது ஏன்?' - கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழ...
6 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 6 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கவுண்டம்பாளையம் போலீஸாா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
இதில், கவுண்டம்பாளையம் காமராஜா் நகரைச் சோ்ந்த ரவி மனைவி தேன்மொழி (44) கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.
சாமுண்டீஸ்வரி நகா் பகுதியில் கஞ்சா விற்ற திலீன் (44) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து மொத்தம் 6 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.