முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை; 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்...
பனியன் தொழிலாளியின் உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்
திருப்பூரில் உயிரிழந்த பனியன் தொழிலாளியின் உடல் அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை தானமாக வழங்கப்பட்டது.
திருப்பூா், 15 வேலம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மலா்மணிநாதன் (56). பனியன் நிறுவனத் தொழிலாளியான இவா், உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக வீட்டில் இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மலா்மணிநாதன் தனது உடலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்க ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்துள்ளாா்.
அதன்படி, அவரது உடலை கும்பத்தினா், அமைப்பினா் ஊா்வலமாக எடுத்து வந்து திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கினா். மலா்மணிநாதனின் உடல் மருத்துவக் கல்லூரி மாணவா்களின் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.