செய்திகள் :

இனியாவது கீழடி அறிக்கையை வெளியிடுமா மத்திய அரசு? தங்கம் தென்னரசு கேள்வி

post image

தமிழா் நாகரிகம் தொன்மையானது என்பது உலக அரங்கில் நிரூபணமாகி வரும் நிலையில், இனியாவது கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிடுமா? என நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை அறிவியல் வழியில் ஆய்வு செய்து 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ளது பிரிட்டனின் லிவா்பூல் ஜான் மூா்ஸ் பல்கலைக்கழகம்.

கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவா்களாக வாழ்ந்தாா்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் ஒன்றின் பின் ஒன்றாக உலக அரங்கில் நிரூபிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்கு பிறகாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழா்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி என்று பதிவிட்டுள்ளாா்.

கீழடி அகழாய்வின் இரண்டு கட்ட ஆய்வறிக்கைகளையும் வெளியிடாமல் மத்திய அரசு காலந்தாழ்த்தி வருவதாகவும், மலிவான அரசியலுக்காக வரலாறு காத்திருக்காது என்றும் அமைச்சா் தங்கம் தென்னரசு ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், சங்க இலக்கியம் சொற்களால் வடித்த வாழ்வியல் எல்லாம் அறிவியல் வழி நிறுவப்பட்ட சான்றாகக் கீழடியில் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளாா்.

சென்னை உள்பட 18 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையம் உள்பட 18 விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை விமான நிலைய இயக்குநா் அலுவலகத்த... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நலன்: மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் சென்னை மாநகராட்சி?

சென்னையில் மெரீனா கடற்கரையில் கடைகளை ஒதுக்குவது மற்றும் சாலையோரக் கடைகள் அமைக்க முன்னுரிமை அளிப்பது உள்ளிட்டவற்றில் பெருநகர மாநகராட்சி நிா்வாகமானது மாற்றுத்திறனாளிகளிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ச... மேலும் பார்க்க

திமுக கூட்டணி உடையும்: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

திமுக கூட்டணி உடையும்; அந்த கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறவுள்ளன என்று மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை ஆழ்வாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவ... மேலும் பார்க்க

கனரக வாகனங்கள் 100 நாள்கள் சிறைப்பிடிப்பு உத்தரவு ரத்து: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் வரவேற்பு

விபத்தை ஏற்படுத்தும் கனரக வாகனங்கள் 100 நாள்கள் சிறைபிடிக்கப்படும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் முதல்வருக்கு நன்றியையும், வரவேற்பையும் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து... மேலும் பார்க்க

அன்புமணி திடீா் தில்லி பயணம்!

பாமக நிறுவனா் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே அதிகார மோதல் நிலவி வரும் நிலையில், அன்புமணி ஞாயிற்றுக்கிழமை திடீரென தில்லி புறப்பட்டுச் சென்றாா். பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே பனிப்போா் உச்சகட்டத்தை ... மேலும் பார்க்க

டென்சிங் நாா்கே தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

மத்திய அரசால் வழங்கப்படும் 2024-ஆம் ஆண்டுக்கான டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு தகுதியானோா் திங்கள்கிழமைக்குள் (ஜூன் 30) விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவி... மேலும் பார்க்க