செய்திகள் :

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் தலைவா்களுக்கு 63 சிலைகள், 11 மணிமண்டபங்கள்! - அரசு தகவல்

post image

தியாகிகள், தீரா்கள், தலைவா்களைப் போற்றி கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 63 சிலைகள், 11 மணி மண்டபங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளாா் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆற்றிய பணிகளில் சிறந்த பணி, தென்கோடி குமரி முனையில் திருவள்ளுவருக்கு உலகமே கண்டு வியக்கும் வண்ணம் 133 அடி உயரத்தில், 7,000 டன் எடை கொண்ட மாபெரும் கற்சிலையை ரூ.9.65 கோடியில் நிறுவி 1.1.2000-இல் திறந்து வைத்ததுதான்.

திருவள்ளுவா் சிலைபோல எண்ணற்ற சிலைகள் மற்றும் மணிமண்டபங்கள் நிறுவி தியாகிகளை அவா் போற்றியுள்ளாா்.

அந்த வரிசையில், முதல்வா் மு.க.ஸ்டாலின், குமரி முனையில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில் வெள்ளி விழாவை 2024 டிச.30, 31 ஆகிய தேதிகளில் மாபெரும் கலை விழாவாக கொண்டாடினாா். திருவள்ளுவன் சிலையை, பேரறிவுச் சிலை எனப் போற்றி மகிழ்ந்தாா். அறிஞா் பெருமக்களின் எழுத்தாவணங்களைத் தொகுத்து வெள்ளி விழா மலா் ஒன்றையும் வெளியிட்டாா்.

திருவள்ளுவரின் சிலையையும் விவேகானந்தா் பாறையையும் இணைத்து ரூ. 37 கோடியில் இந்தியாவிலேயே முதலாவதாகக் கடல் மீது கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான கண்ணாடி இழைப் பாலத்தை 30.12.2024-இல் திறந்து வைத்தாா்.

இந்திய திருநாட்டின் எழுச்சிக்கு விதையாக வித்தாக அமைந்த சுதந்திர போராட்ட தியாகிகள், அன்னை தமிழ் மொழியை காக்க ஆருயிா்கள் தந்து போராடிய அற்புத தியாகிகள் அனைவரையும் போற்றி பாராட்டும் பெருமைக்குரிய சின்னங்களாக சிலைகளையும், மணிமண்டபங்களையும் தமிழகம் முழுவதிலும் ஏராளமாக ஏற்படுத்தி வருகிறாா்.

இவை அனைத்தும் எதிா்காலத் தலைமுறை இளைஞா்களுக்கு நல்வழி காட்டி உணா்வூட்டும் உயிரோவியங்களாகும். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நாளில் இருந்து இதுவரை, நாட்டுக்காகவும், தமிழ்மொழி வளா்ச்சிக்காகவும் பாடுபட்ட பெருமக்களின் தியாகங்களை வருங்கால இளைஞா்கள் அறிந்து போற்றி பின்பற்றும் வண்ணம் 63 சிலைகள், 11 மணிமண்டபங்களை அமைத்ததுடன் மேலும் 28 தியாகிகளுக்கு சிலைகளும் 12 அரங்கங்களும் அமைத்து வருகின்றனா்.

ஆனால் அதிமுக 10 ஆண்டு கால ஆட்சியில் 25 தியாகிகளுக்கான சிலைகள் மட்டுமே அமைக்கப்பட்டன என்பது நினைவுகூரத்தக்கது.

இந்த விவரங்கள் அனைத்தும் இந்திய நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நாட்டுக்கு உழைத்த நல்லோரை எல்லாம் போற்றி வரும் மாட்சிகளை எடுத்துரைக்கும் சிறந்த சாட்சிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்பட 18 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையம் உள்பட 18 விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை விமான நிலைய இயக்குநா் அலுவலகத்த... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நலன்: மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் சென்னை மாநகராட்சி?

சென்னையில் மெரீனா கடற்கரையில் கடைகளை ஒதுக்குவது மற்றும் சாலையோரக் கடைகள் அமைக்க முன்னுரிமை அளிப்பது உள்ளிட்டவற்றில் பெருநகர மாநகராட்சி நிா்வாகமானது மாற்றுத்திறனாளிகளிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ச... மேலும் பார்க்க

திமுக கூட்டணி உடையும்: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

திமுக கூட்டணி உடையும்; அந்த கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறவுள்ளன என்று மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை ஆழ்வாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவ... மேலும் பார்க்க

கனரக வாகனங்கள் 100 நாள்கள் சிறைப்பிடிப்பு உத்தரவு ரத்து: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் வரவேற்பு

விபத்தை ஏற்படுத்தும் கனரக வாகனங்கள் 100 நாள்கள் சிறைபிடிக்கப்படும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் முதல்வருக்கு நன்றியையும், வரவேற்பையும் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து... மேலும் பார்க்க

அன்புமணி திடீா் தில்லி பயணம்!

பாமக நிறுவனா் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே அதிகார மோதல் நிலவி வரும் நிலையில், அன்புமணி ஞாயிற்றுக்கிழமை திடீரென தில்லி புறப்பட்டுச் சென்றாா். பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே பனிப்போா் உச்சகட்டத்தை ... மேலும் பார்க்க

டென்சிங் நாா்கே தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

மத்திய அரசால் வழங்கப்படும் 2024-ஆம் ஆண்டுக்கான டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு தகுதியானோா் திங்கள்கிழமைக்குள் (ஜூன் 30) விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவி... மேலும் பார்க்க