செய்திகள் :

மரத்தில் தொங்கிய உடல்; கொலையா?தற்கொலையா? கேள்வி கேட்கும் அரசியல் கட்சிகள்; என்ன நடந்தது?

post image

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த சென்னாக்கால்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (42). கூலித் தொழிலாளியான முருகனுக்கு மணிமேகலை என்ற மனைவியும், கலாவதி, காவியா என்ற மகள்களும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 26-ஆம் தேதி சென்னாக்கல்பாளையம் கிராமத்தில் மேட்டுக்காட்டு தோட்டத்தில் உள்ள வேப்பமரத்தில் கைகளைக் கட்டிக் கொண்டு தூக்கில் தொங்கிய நிலையில் முருகன் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக விசாரித்த அலங்கியம் போலீஸார், காசநோயால் பாதிக்கப்பட்ட முருகன் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப் பதிவு செய்தனர். தாராபுரம் அரசு மருத்துவமனையில் முருகன் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்ப் புலிகள் கட்சி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளன.

மரணம்

இதுகுறித்து தமிழ்ப் புலிகள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஒண்டிவீரன் பேசுகையில், "காசநோயால் பாதிக்கப்பட்ட முருகன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 10 அடிக்கும் மேல் உயரமுள்ள மரத்தின் மீது ஏறி, கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டு ஒருவரால் எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும். இதுகுறித்து போலீஸில் கேட்டால், முருகன்தான் தனது கைகளைக் கட்டிக் கொண்டு மரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், பிரேதப் பரிசோதனை செய்தவுடன் அவசர கதியில் முருகனின் உடல் எரியூட்டப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரமாக கணவன், மனைவிக்கு இடையே சண்டை நடந்துள்ளது. இதில், முருகனின் மனைவி மணிமேகலையிடம் கூட போலீஸார் சரியாக விசாரணை நடத்தவில்லை. இதுபோன்ற பல சந்தேகங்கள் முருகனின் மரணத்தில் ஒழிந்துள்ளது. உரிய முறையில் போலீஸார் விசாரணை நடத்தவில்லையென்றால், போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்" என்றார்.

காவல் துறை

இதுகுறித்து தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கூறுகையில், "உடல்நலம் பாதிக்கப்பட்ட முருகன் இதற்கு முன்பு இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்ட முருகன், மரத்தில் ஏறி தனது கைகளைக் கட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. முருகனின் உறவினர்கள் அவரது மரணம் குறித்து எந்த சந்தேகமும் எழுப்பவில்லை. அரசியல் கட்சியினர் சிலர் ஆதாயத்துக்காக குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றனர்" என்றார்.

``மாமியார் வீட்டில் மரியாதை இல்லை..'' - மனைவியை கொலை செய்த கணவர் பகீர் வாக்கு மூலம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் படுவூர் காட்டுவழி பகுதியைச் சேர்ந்தவர் டார்வின்(46). கூலி தொழிலாளி. இவரது மனைவி பபிதா நித்யசெல்வி(39). இவர்களுக்கு பென்குரூஸ்(9) என்ற மகனும், டிக்... மேலும் பார்க்க

Yash Dayal: "திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்" - RCB வீரர் யஷ் தயாள் மீது இளம்பெண் புகார்

இந்தாண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்.சி.பி அணியில் கடந்த இரண்டாண்டுகளாக முக்கிய பவுலராகத் திகழும் யஷ் தயாள், திருமணம் செய்வதாகக் கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாக உத்தரப்பிரதேச பெண் ஒருவர் புகாரளித்தி... மேலும் பார்க்க

`தலைமறைவான ஜெகன் மூர்த்தி?' - தனிப்படை அமைத்த சிபிசிஐடி! - உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் காதல் திருமணம் செய்த வாலிபரை ஏடிஜிபி ஜெயராம் காரில் கடத்தி சென்று மிரட்டி தாக்கிய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாகப் புரட்சி பார... மேலும் பார்க்க

`கச்சத்தீவு மீட்பு மாநாடு' நடத்தி விட்டு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்.. கடலில் சிறை பிடித்த இலங்கை

ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 15-ம் தேதி முதல் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற போதும் மீனவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு... மேலும் பார்க்க

Puri stampede: பூரி ஜெகன்நாதர் கோயில்: ரதயாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி; 50 பேர் காயம்

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஒடிசா பூரி ஜெகன்நாதர் கோயில் ரதயாத்திரை மிகவும் பிரபலம். இந்த ரதயாத்திரையைக் காண கோடிக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து வருவதுண்டு. இந்த ரதயாத்திரையின் போது பூரி நகரம... மேலும் பார்க்க

விசாரணைக்கு சென்ற இளைஞர் மரணம்; திருப்புவனம் காவல்நிலையத்தில் உறவினர்கள் போராட்டம்.. நடந்தது என்ன?

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.இக்கோயிலில் தனியார் நிறுவனம் மூலம் அப்பக... மேலும் பார்க்க