செய்திகள் :

Yash Dayal: "திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்" - RCB வீரர் யஷ் தயாள் மீது இளம்பெண் புகார்

post image

இந்தாண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்.சி.பி அணியில் கடந்த இரண்டாண்டுகளாக முக்கிய பவுலராகத் திகழும் யஷ் தயாள், திருமணம் செய்வதாகக் கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாக உத்தரப்பிரதேச பெண் ஒருவர் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காசியாபாத்தைச் சேர்ந்த அப்பெண் மாநில முதலமைச்சர் அலுவலகத்தின் ஆன்லைன் குறைதீர்க்கும் போர்ட்டலில் யஷ் தயாள் மீது தனது புகாரைப் பதிவுசெய்திருக்கிறார்.

யஷ் தயாள்
யஷ் தயாள்

புகாரில் அப்பெண்ணின் கூறியதன்படி, கடந்த 5 ஆண்டுகளாக அந்தப் பெண்ணுடன் அவர் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார்.

மேலும், அவர் தனது குடும்பத்தினரிடம் அப்பெண்ணை தங்களின் மருமகள் என்று அறிமுகம் செய்ததால் அப்பெண்ணும் அவரை முழுமையாக நம்பினார்.

அதன்பின்னர், திருமணத்தின் பெயரில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அப்பெண்ணை அவர் பயன்படுத்தியிருக்கிறார்.

குறிப்பாக, ரிலேஷன்ஷிப்பில் இருந்தபோது மனதளவிலும், பொருளாதார ரீதியாகவும் அவரைச் சார்ந்திருக்க நேர்ந்ததாகவும், ஆனால் பிறகுதான் வேறு சில பெண்களுடனும் அவர் இதேபோன்ற ரிலேஷன்ஷிப்பில் இருப்பது தெரியவந்தது என்றும் புகாரில் அப்பெண் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜூன் 14-ம் தேதியே பெண்களுக்கான ஹெல்ப்லைன் நம்பர் 181-ஐ தொடர்பு கொண்டபோதும் காவல் நிலையம் வரை இந்த விவகாரம் செல்லவில்லை என்பதால் முதல்வர் அலுவலகத்தை நாடியதாகக் கூறும் புகார்தாரர், "இந்த விஷயத்தை உடனடியாக பாரபட்சமின்றி விசாரித்து, குற்றம்சாட்டப்பட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே என் கோரிக்கை.

Yash Dayal
Yash Dayal

இந்த நடவடிக்கை எனக்கானது மட்டுமல்லாது, என்னைப் போன்று பாதிக்கப்படுகிற அனைத்து பெண்களுக்கும் முக்கியமானது." என்று புகாரில் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இதற்கான ஆதாரங்களாக இருவருக்குமான மெசேஜ்கள், ஸ்கிரீன்ஷாட்கள், வீடியோ கால் மற்றும் புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாக அப்பெண் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.

இருப்பினும் யஷ் தயாள் தரப்பிலிருந்து எந்தவொரு அறிக்கையும் வெளியாகவில்லை.

``மாமியார் வீட்டில் மரியாதை இல்லை..'' - மனைவியை கொலை செய்த கணவர் பகீர் வாக்கு மூலம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் படுவூர் காட்டுவழி பகுதியைச் சேர்ந்தவர் டார்வின்(46). கூலி தொழிலாளி. இவரது மனைவி பபிதா நித்யசெல்வி(39). இவர்களுக்கு பென்குரூஸ்(9) என்ற மகனும், டிக்... மேலும் பார்க்க

`தலைமறைவான ஜெகன் மூர்த்தி?' - தனிப்படை அமைத்த சிபிசிஐடி! - உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் காதல் திருமணம் செய்த வாலிபரை ஏடிஜிபி ஜெயராம் காரில் கடத்தி சென்று மிரட்டி தாக்கிய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாகப் புரட்சி பார... மேலும் பார்க்க

`கச்சத்தீவு மீட்பு மாநாடு' நடத்தி விட்டு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்.. கடலில் சிறை பிடித்த இலங்கை

ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 15-ம் தேதி முதல் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற போதும் மீனவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு... மேலும் பார்க்க

Puri stampede: பூரி ஜெகன்நாதர் கோயில்: ரதயாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி; 50 பேர் காயம்

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஒடிசா பூரி ஜெகன்நாதர் கோயில் ரதயாத்திரை மிகவும் பிரபலம். இந்த ரதயாத்திரையைக் காண கோடிக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து வருவதுண்டு. இந்த ரதயாத்திரையின் போது பூரி நகரம... மேலும் பார்க்க

மரத்தில் தொங்கிய உடல்; கொலையா?தற்கொலையா? கேள்வி கேட்கும் அரசியல் கட்சிகள்; என்ன நடந்தது?

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த சென்னாக்கால்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (42). கூலித் தொழிலாளியான முருகனுக்கு மணிமேகலை என்ற மனைவியும், கலாவதி, காவியா என்ற மகள்களும் உள்ளனர். இந்நிலையி... மேலும் பார்க்க

விசாரணைக்கு சென்ற இளைஞர் மரணம்; திருப்புவனம் காவல்நிலையத்தில் உறவினர்கள் போராட்டம்.. நடந்தது என்ன?

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.இக்கோயிலில் தனியார் நிறுவனம் மூலம் அப்பக... மேலும் பார்க்க