செய்திகள் :

திருச்செந்தூர்: அறுபடை ஓவியம், தங்க நிறத்தில் ஜொலிக்கும் யாகசாலை.. குடமுழுக்கு பணிகள் தீவிரம்!

post image

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும்  ஜூலை, 7 -ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

 14 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதால் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோவில் மேற்கு கோபுரம் அருகே 8 ஆயிரம் சதுர அடியில் 76 குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கும் பணிகள் கடந்த 40 நாள்களாக நடந்து வந்தது.

யாகசாலை முகப்பு

இந்த யாகசாலையில் பல்வேறு வர்ணங்களில் வர்ணம் பூசுதல், வண்ண பேப்பர் ஒட்டுதல், சித்திரங்கள் வரைதல் என, 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தற்போது அந்த பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் முருகனின் அறுபடை வீடுகள் சித்திரமாக வரையப்பட்டுள்ளது. மேலும் பஞ்சவர்ண வேலைகளில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலை முழுவதும் தங்க வர்ணத்தில் மிகவும் தரமான அட்டைகளால் ஒட்டப்பட்டுள்ளது. யாகசாலையின் நடுவே பிரமாண்டமாக 5 அடி உயரத்தில் பஞ்ச ஆசன வேதிகை உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் ஆமை மீது 5 தலை நாகம் அமர்ந்திருப்பது போலும், அதற்கு மேல் முனிவர்கள், நந்தி, சிங்கம், அலங்கார பொம்மைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் தாமரைப்பூ அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மேல் யாகசாலை வரும் ஜூலை 1-ம் தேதி தொடங்கும் நாளில் மூலவர் சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்யும் கலசமும் வைக்கப்பட உள்ளது. மேலும் இந்த யாகசாலையில் ஆழி, மயில், நந்தி, யானை உள்பட பல்வேறு அலங்கார உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட நந்தி உருவம்

 இதுகுறித்து இந்த யாகசாலையை உருவாக்கிய மயிலாடி பகுதியைச் சேர்ந்த கலைஞர்களிடம் பேசினோம், “கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இதே திருச்செந்தூர் முருகன் கோயில்  கும்பாபிஷேக விழாவிற்கு நாங்கள்தான் யாகசாலைகள் அமைத்தோம். அதேபோல் இந்த ஆண்டிற்கும் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மொத்தமாக 76 குண்டங்கள் அமைத்துள்ளோம். இதில் முருகப் பெருமானுக்கு மட்டும் 49 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அது தவிர ஜெயந்திநாதர் மற்றும் நடராஜருக்கு பஞ்ச குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  கடந்த 40 நாள்களுக்கு மேலாக இந்த பணிகளை செய்து வந்தோம். தற்போது இந்த பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வந்தோம். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பல்வேறு விஷயங்களை புதிதாக செய்துள்ளோம்.

யாக சாலை முகப்பு

குறிப்பாக,  இங்கு தங்க நிறத்தில் வர்ண பேப்பர் ஒட்டாமல் தரமான நிஜமாகவே தங்க வர்ணத்தில் ஜொலிக்கும் வகையில் உருவாக்கி உள்ளோம். மேலும் பஞ்ச ஆசன வேதிகையையும் உருவாக்கியுள்ளோம். யாகசாலையைச் சுற்றி அறுபடை வீடுகளில் உள்ள முருகனின் உருவங்களை வரைந்துள்ளோம். ஆழி, மயில், நந்தி, யானை போன்ற உருவங்களை அலங்காரமாக வைத்துள்ளோம்” என்றனர்.

விருதுநகர்: 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சொக்கநாத சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்..!

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாத சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த 16 ஆம் தேதி தேவதா அனுக்ஞை,... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: கப்பலில் தவறி விழுந்த பணியாளர்; குணமானதும் வெள்ளி வேல் காணிக்கை செலுத்திய உரிமையாளர்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடும் கடற்கரை ஓரத் தலமும் ஆனதுதிருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை முன்வ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு: "நல்ல நேரத்தில் நடத்த வேண்டும்" -உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்தக் குடமுழுக்கு காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் நடத்தப்படும் எ... மேலும் பார்க்க

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: புதிய வடம் பொருத்தும் பணி தீவிரம்; பக்தர்களின் கோரிக்கை என்ன?

நெல்லையில் அடையாளங்களில் ஒன்று அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் திருக்கோயில். இங்கு நடைபெறும் விழாக்களில் ஆனிப் பெருந்திருவிழா மிகவும் சிறப்பானது. இந்தாண்டு ஆனித் திருவிழா வரும் 30-ம் தேதி க... மேலும் பார்க்க

Chennai: மத்திய கைலாஷ் கோவில் பராமரிப்பு பணிகள்; தளத்தைத் தூக்கும் பணி தொடக்கம் | Photo Album

இங்கு பெற்றோரை ஆசிரியராக மாற்றுகிறோம்! | Avvai Kapagam | Pesalam Vanga | Vada ChennaiJunior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/3PaAEiYவணக்கம்,BIG B... மேலும் பார்க்க

தமிழ் கடவுள் முருகனும் பழமையான கோயில்களும்! - நிறைவான பயண அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க