செய்திகள் :

விருதுநகர்: 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சொக்கநாத சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்..!

post image

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாத சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த 16 ஆம் தேதி தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வரா பூஜையுடன் தொடங்கியது.

கடந்த 7 நாள்கள் தொடர்ந்து மங்கள இசையுடன் கணபதி ஹோமம், ஸ்கந்த ஹோமம், பிரம்மச்சாரி பூஜை, பூர்ணாகுதி தீபாராதனைகள் உள்ள பூஜைகள் நடைபெற்றன.

மீனாட்சி சொக்கநாத சுவாமி திருக்கோயில்

கும்பாபிஷேக தினமான இன்று அதிகாலை மங்கள இசையோடு, ஆறாம்கால யாக பூஜைகள், பூர்ணாகுதி தீபாராதனைகள் நடைபெற்று கடம் புறப்பாடு நடைபெற்று.

வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுரம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள விநாயகர், முருகன், நடராஜர், சண்டிகேஸ்வரர் கோபுர விமானங்களுக்கும் காலை 7.10 மணியளவில் புனித நீர் ஊற்றப்பட்ட தீபாராதனையுடன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மீனாட்சி சொக்கநாத சுவாமி திருக்கோயில்

பின்னர் பக்தர்களின் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாத சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்தி திருவீதி உலா நடைபெறுகிறது.

திருச்செந்தூர்: கப்பலில் தவறி விழுந்த பணியாளர்; குணமானதும் வெள்ளி வேல் காணிக்கை செலுத்திய உரிமையாளர்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடும் கடற்கரை ஓரத் தலமும் ஆனதுதிருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை முன்வ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு: "நல்ல நேரத்தில் நடத்த வேண்டும்" -உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்தக் குடமுழுக்கு காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் நடத்தப்படும் எ... மேலும் பார்க்க

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: புதிய வடம் பொருத்தும் பணி தீவிரம்; பக்தர்களின் கோரிக்கை என்ன?

நெல்லையில் அடையாளங்களில் ஒன்று அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் திருக்கோயில். இங்கு நடைபெறும் விழாக்களில் ஆனிப் பெருந்திருவிழா மிகவும் சிறப்பானது. இந்தாண்டு ஆனித் திருவிழா வரும் 30-ம் தேதி க... மேலும் பார்க்க

Chennai: மத்திய கைலாஷ் கோவில் பராமரிப்பு பணிகள்; தளத்தைத் தூக்கும் பணி தொடக்கம் | Photo Album

இங்கு பெற்றோரை ஆசிரியராக மாற்றுகிறோம்! | Avvai Kapagam | Pesalam Vanga | Vada ChennaiJunior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/3PaAEiYவணக்கம்,BIG B... மேலும் பார்க்க

தமிழ் கடவுள் முருகனும் பழமையான கோயில்களும்! - நிறைவான பயண அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சியம்மன் கோயில்: ``ஜூலை 13 மாலை முதல் 14-ம் தேதி வரை நடை சாத்தல்; தரிசனம் கிடையாது''

"திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் திருப்பரங்குன்றத்திற்கு புறப்படுவதால் ஜூலை 14 ஆம் தேதி மீனாட்சியம... மேலும் பார்க்க