செய்திகள் :

டி20 வடிவிலான போட்டி என்னுடைய பலம் கிடையாது: ஸ்மிருதி மந்தனா

post image

டி20 வடிவிலான போட்டி தன்னுடைய பலம் கிடையாது என இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று (ஜூன் 28) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சர்வதேச டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்த கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது.

ஸ்மிருதி மந்தனா கூறியதென்ன?

சர்வதேச டி20 போட்டியில் முதல் சதம் விளாசிய நிலையில், சர்வதேச டி20 போட்டியில் சதம் விளாசியது சிறப்பான உணர்வைத் தருவதாகவும், இயல்பாகவே டி20 வடிவிலான போட்டி தன்னுடைய பலம் கிடையாது எனவும் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சர்வதேச டி20 போட்டிகளில் முதல் சதம் விளாசியது மிகவும் சிறப்பான உணர்வைத் தருகிறது. ஏனெனில், டி20 வடிவிலான போட்டிகள் என்னுடைய பலம் கிடையாது. டி20 போட்டிகளில் நான் தொடர்ச்சியாக என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன். நான் பெரிய ஷாட்டுகள் விளையாடும் நபர் கிடையாது. பந்தினை டைம் செய்து விளையாடுவது எனக்குப் பிடிக்கும். அதனால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கே என்னுடைய பேட்டிங் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். ஆனால், டி20 வடிவிலான போட்டிகளில் சதம் விளாசியுள்ளது மிகவும் சிறப்பான விஷயம். டி20 போட்டிகளுக்கு ஏற்றவாறு பந்தினை அதிரடியாக அடித்து விளையாட முயற்சி செய்து வருகிறேன் என்றார்.

தனது முதல் டி20 சதத்தை ஸ்மிருதி மந்தனா அவரது 149-வது போட்டியில் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றையப் போட்டியில் அவர் 62 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார்.

Smashing a maiden T20I century against England was "pretty special" as the shortest format is "not one of my strengths", said India stand-in skipper Smriti Mandhana.

இதையும் படிக்க: முதல் டெஸ்ட்: 418 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்கா டிக்ளேர்; ஜிம்பாப்வே நிதானம்!

இரவு முழுவதும் தூங்கவில்லை; டி20 உலகக் கோப்பை நினைவுகளை பகிர்ந்த ரோஹித் சர்மா!

டி20 உலகக் கோப்பையை வென்று ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து அது தொடர்பான நினைவுகளை ரோஹித் சர்மா பகிர்ந்துள்ளார்.இந்திய அணி கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

முதல் இன்னிங்ஸில் 251 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஜிம்பாப்வே; வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வலுவான நிலையில் உள்ளது.தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில்... மேலும் பார்க்க

அளவுக்கு அதிகமாக பும்ராவை நம்பியிருக்கும் இந்திய அணி: முன்னாள் கேப்டன்

இந்திய அணி அளவுக்கு அதிகமாக ஜஸ்பிரித் பும்ராவை நம்பியிருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதின் தெரிவித்துள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ... மேலும் பார்க்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த தென்னாப்பிரிக்க வீரர்!

தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்ப... மேலும் பார்க்க

மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்ற ஸ்மித்..! 2-ஆவது டெஸ்ட்டில் விளையாடுவாரா?

ஆஸி. நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் மேற்கிந்தியத் தீவுக்குச் சென்றடைந்துள்ளார். மே.இ.தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அணி 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது. பாரபடோஸி... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: 418 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்கா டிக்ளேர்; ஜிம்பாப்வே நிதானம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 418 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கு... மேலும் பார்க்க