செய்திகள் :

`கச்சத்தீவு மீட்பு மாநாடு' நடத்தி விட்டு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்.. கடலில் சிறை பிடித்த இலங்கை

post image

ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 15-ம் தேதி முதல் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற போதும் மீனவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் பிடிபடவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த மீனவர்கள் குறைந்த அளவே மீன்பிடிக்க செல்கின்றனர்.

கச்சத்தீவு மீட்பு மாநாடு

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் பாரம்பரிய இந்திய மீனவர் நலச்சங்கத்தினர் இணைந்து ராமேஸ்வரத்தில் `கச்சத்தீவு மீட்பு' மாநாட்டினை நடத்தினர்.

இந்த மாநாட்டில், கடந்த 2014 துவங்கி சென்ற ஆண்டு வரை 3550 மீனவர்களும் அவர்களது 706 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மீனவர்கள் சுமார் 200 கோடி மதிப்புள்ள படகுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை அரசின் இத்தகைய செயலை தடுத்து நிறுத்தும் வகையில், பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது போல் இலங்கையுடன் செய்து கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தையும் ரத்து செய்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் சனிக்கிழமை காலை ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மீனவரின் உடமைகள்

நேற்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து 466 படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் பாரம்பரிய பகுதிகளில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் சேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகினையும் அதில் இருந்த சேசு உள்ளிட்ட 8 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் விசாரணைக்காக தலைமன்னார் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். `கச்சத்தீவு மீட்பு மாநாடு' முடிந்த மறுநாளிலேயே மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்பட்டிருக்கும் அத்துமீறல் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

``மாமியார் வீட்டில் மரியாதை இல்லை..'' - மனைவியை கொலை செய்த கணவர் பகீர் வாக்கு மூலம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் படுவூர் காட்டுவழி பகுதியைச் சேர்ந்தவர் டார்வின்(46). கூலி தொழிலாளி. இவரது மனைவி பபிதா நித்யசெல்வி(39). இவர்களுக்கு பென்குரூஸ்(9) என்ற மகனும், டிக்... மேலும் பார்க்க

Yash Dayal: "திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்" - RCB வீரர் யஷ் தயாள் மீது இளம்பெண் புகார்

இந்தாண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்.சி.பி அணியில் கடந்த இரண்டாண்டுகளாக முக்கிய பவுலராகத் திகழும் யஷ் தயாள், திருமணம் செய்வதாகக் கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாக உத்தரப்பிரதேச பெண் ஒருவர் புகாரளித்தி... மேலும் பார்க்க

`தலைமறைவான ஜெகன் மூர்த்தி?' - தனிப்படை அமைத்த சிபிசிஐடி! - உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் காதல் திருமணம் செய்த வாலிபரை ஏடிஜிபி ஜெயராம் காரில் கடத்தி சென்று மிரட்டி தாக்கிய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாகப் புரட்சி பார... மேலும் பார்க்க

Puri stampede: பூரி ஜெகன்நாதர் கோயில்: ரதயாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி; 50 பேர் காயம்

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஒடிசா பூரி ஜெகன்நாதர் கோயில் ரதயாத்திரை மிகவும் பிரபலம். இந்த ரதயாத்திரையைக் காண கோடிக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து வருவதுண்டு. இந்த ரதயாத்திரையின் போது பூரி நகரம... மேலும் பார்க்க

மரத்தில் தொங்கிய உடல்; கொலையா?தற்கொலையா? கேள்வி கேட்கும் அரசியல் கட்சிகள்; என்ன நடந்தது?

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த சென்னாக்கால்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (42). கூலித் தொழிலாளியான முருகனுக்கு மணிமேகலை என்ற மனைவியும், கலாவதி, காவியா என்ற மகள்களும் உள்ளனர். இந்நிலையி... மேலும் பார்க்க

விசாரணைக்கு சென்ற இளைஞர் மரணம்; திருப்புவனம் காவல்நிலையத்தில் உறவினர்கள் போராட்டம்.. நடந்தது என்ன?

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.இக்கோயிலில் தனியார் நிறுவனம் மூலம் அப்பக... மேலும் பார்க்க