செய்திகள் :

அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் கீழடியில்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

post image

கீழடியில் கிடைக்கப்பெற்ற முக மாதிரிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மதுரைக்கு அருகே வைகை நதிக்கரையில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2500 ஆண்டுகளுக்குமுன் (கி.மு. ஆறாம் நூற்றாண்டு) வாழ்ந்த தமிழர் முகங்களின் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் உள்ள ஆய்வகத்தில் 3டி முறையில் 80 சதவிகித அறிவியல், 20 சதவிகித அளவிலான கலையைப் பயன்படுத்தி, முகத்தின் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், டிஎன்ஏ-வையும் பகுப்பாய்வு செய்து, இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை அறியவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், அகழாய்வின் மூலம் பெறப்பட்ட முக மாதிரிகளைக் குறிப்பிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், ``சங்க இலக்கியம் சொற்களால் வடித்த வாழ்வியல் எல்லாம் அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் கீழடியில்’’ என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறை மதுரைக்கு அருகே வைகை நதிக்கரையில் கீழடி எனும் இடத்தில் அகழாய்வை மேற்கொண்டது. இந்த அகழாய்வில் 5,300-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கிடைத்ததுடன், ஒரு நகர அமைப்புக்கான சான்றுகளும் கிடைத்தன. அந்தப் பொருள்களை சோதனை செய்தபோது அவை 2,800 ஆண்டுகள் வரை பழைமையானவை என்று தெரிய வந்தது.

ஆனால் இந்த அகழாய்வின் முதல் இரண்டு கட்டம் நடைபெற்ற அகழாய்வுகள் மற்றும் அதன் அறிக்கை ஆகியவை வெளியிடப்படும் முன்பே அந்த ஆய்வை மேற்கொண்ட அமா்நாத் ராமகிருஷ்ணன் அப்பணியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த அகழாய்வுப் பணிகளை தொல்லியல்துறை முடித்துக்கொண்டது.

அதன் பின் தற்போதுவரை 10 கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழகத் தொல்லியல் துறை நடத்தியுள்ளது. அதில் கிடைத்த ஆயிரக்கணக்கான பழம்பொருள்களைக் கொண்டு அருங்காட்சியகம் வைக்கும் அளவுக்கு தொல் பொருள்கள் கிடைத்துள்ளன. தமிழகத் தொல்லியல் துறை அறிக்கைகள், ஒவ்வோர் ஆய்வின் முடிவிலும் தொடா்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

ஆனால் 2014-ல் செய்யப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் அறிக்கை இதுவரை வெளியிடவில்லை. மேலும், அமா்நாத் ராமகிருஷ்ணாவிடம் இந்திய தொல்லியல் துறை அந்த அறிக்கையை மீண்டும் திருத்தி எழுதிச் சமா்ப்பிக்குமாறு கடிதம் அனுப்பியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழா் நாகரிகம் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த கீழடி அறிக்கையை மத்திய அரசு உடனே வெளியிட வேண்டும் என்கிற கோரிக்கையை பல்வேறு தரப்பினர் எழுப்பி வருகின்றனர்.

மேலும், முக மாதிரியைக் குறிப்பிட்டு, கீழடி அறிக்கையை மத்திய அரசு இதற்கு பின்பாவது வெளியிடுமா என நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் கேள்வி எழுப்பியுள்ளார்.

போலீஸ் விசாரணையில் திமுகவினருக்கு ராஜமரியாதை- அண்ணாமலை

போலீஸ் விசாரணையில் திமுகவினர் ராஜமரியாதையுடன் நடத்தப்படுகின்றனர் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத... மேலும் பார்க்க

மீனவர்களை விடுவிக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தி... மேலும் பார்க்க

வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்வா?- அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சமூக வலைதளங்களிலும், சில செய்தி... மேலும் பார்க்க

சென்னையில் ஆன்லைன் வர்த்தக மோசடி: 4 பேர் கைது

சென்னையில் ஆன்லைன் வர்த்தக மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை தி.நகரைச் சேர்ந்தவர், வாட்ஸ்அப் செய்தியை பார்த்து அதிக லாபம் தரும் பங்கு வர்த்தக வலைதளத்தில் சேர்வதற்காக அவருக்கு... மேலும் பார்க்க

காவல்துறையை நிர்வகிக்கத் தெரியாத முதல்வர்! எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சிவகங்கையில் நகைகள் மாயமானது தொடா்பாக விசாரணையில், காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தற்காலிக ஊழியா் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறையை நேரடிக் கண்காணிப்பில் வைத்திருக்கும் முதல்வருக்கு அதிமு... மேலும் பார்க்க

புதுச்சேரி பாஜக தலைவராகிறார் ராமலிங்கம்

புதுச்சேரி பாஜக தலைவராக ராமலிங்கம் போட்டியின்றி தேர்வாகிறார். வேட்பு மனு தாக்கல் இன்று 12 மணிக்கு நிறைவு பெற்ற நிலையில் ராமலிங்கம் மட்டுமே தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நாளை... மேலும் பார்க்க