செய்திகள் :

மீனவர்களை விடுவிக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

post image

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்யவும், மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதில், கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்வதற்கு இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.06.2025) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்தை ஈர்த்துள்ள முதல்வர், 29.06.2025 அன்று இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 08 மீனவர்களுடன், IND-TN-10-MM-773 பதிவு எண் கொண்ட அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகையும் சிறை பிடித்துள்ளதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய கைது நடவடிக்கைகள், படகுகள் மற்றும் உபகரணங்கள் இழப்பிற்கும், நீண்டகால சிறை பிடிப்பிற்கும் வழிவகுப்பதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வருடாந்திர மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து, மீன்பிடிப் பருவம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், நமது மீனவர்கள் வாழ்வாதாரம் ஈட்டும் நம்பிக்கையுடன் மீன்பிடிக்க கடலுக்குத் திரும்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதல்வர் மீன்பிடி தொடர்பான பிரச்னைகளைக் கையாள்வதில், கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Summary

CM Stalin has written to External Affairs Minister Jaishankar in an effort to secure the release of fishermen arrested by the Sri Lankan Navy.

வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்வா?- அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

போலீஸ் விசாரணையில் திமுகவினருக்கு ராஜமரியாதை- அண்ணாமலை

போலீஸ் விசாரணையில் திமுகவினர் ராஜமரியாதையுடன் நடத்தப்படுகின்றனர் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத... மேலும் பார்க்க

வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்வா?- அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சமூக வலைதளங்களிலும், சில செய்தி... மேலும் பார்க்க

சென்னையில் ஆன்லைன் வர்த்தக மோசடி: 4 பேர் கைது

சென்னையில் ஆன்லைன் வர்த்தக மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை தி.நகரைச் சேர்ந்தவர், வாட்ஸ்அப் செய்தியை பார்த்து அதிக லாபம் தரும் பங்கு வர்த்தக வலைதளத்தில் சேர்வதற்காக அவருக்கு... மேலும் பார்க்க

காவல்துறையை நிர்வகிக்கத் தெரியாத முதல்வர்! எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சிவகங்கையில் நகைகள் மாயமானது தொடா்பாக விசாரணையில், காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தற்காலிக ஊழியா் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறையை நேரடிக் கண்காணிப்பில் வைத்திருக்கும் முதல்வருக்கு அதிமு... மேலும் பார்க்க

புதுச்சேரி பாஜக தலைவராகிறார் ராமலிங்கம்

புதுச்சேரி பாஜக தலைவராக ராமலிங்கம் போட்டியின்றி தேர்வாகிறார். வேட்பு மனு தாக்கல் இன்று 12 மணிக்கு நிறைவு பெற்ற நிலையில் ராமலிங்கம் மட்டுமே தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நாளை... மேலும் பார்க்க

அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் கீழடியில்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

கீழடியில் கிடைக்கப்பெற்ற முக மாதிரிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.மதுரைக்கு அருகே வைகை நதிக்கரையில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த மண்டை ஓடுகள... மேலும் பார்க்க