செய்திகள் :

2015-ல் 25 கோடி பேர்; தற்போது 95 கோடி பேருக்கு பயன்! பிரதமர் மோடி பெருமிதம்!

post image

இந்தியாவில் 95 கோடி பேர் சமூகப் பாதுகாப்பு சலுகையைப் பயன்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இதன்படி, ஜூன் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று நடைபெற்ற 123 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் சமூகப் பாதுகாப்பு சலுகை குறித்து பிரதமர் மோடி பேசினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் ஏதேனும் ஒரு சமூகப் பாதுகாப்பு சலுகையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதுதொடர்பான அறிக்கையை சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்டுள்ளது.

இந்திய மக்கள்தொகையில் 64 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், ஏதேனும் ஒரு சமூகப் பாதுகாப்பு சலுகையைப் பயன்படுத்தி வருவதாக அறிக்கையில் கூறுகிறது.

2015 வரையில் அரசின் திட்டங்கள் 25 கோடிக்கும் குறைவான மக்களையே சென்றடைந்தன. ஆனால், தற்போது 95 கோடி பேர் சமூகப் பாதுகாப்பு சலுகையால் பயனடைகின்றனர்.

சுகாதாரம் முதல் சமூகப் பாதுகாப்பு வரையில், ஒவ்வொரு துறையிலும் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறி வருகிறது.

இதன் மூலம் சமூக நீதி வெளிக்கொணரப்படுகிறது. இந்த வெற்றிகள் அனைத்தும், வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது; இந்தியாவின் ஒவ்வோர் அடியிலும் வலுப் பெறும் என்ற நம்பிக்கையும் தருகிறது என்று தெரிவித்தார்.

மேலும், இந்தியாவை டிராக்கோமா (பாக்டீரியா நோய்த் தொற்று) இல்லாத நாடாக உலக சுகாதார அமைப்பு அறிவித்ததை, குறிப்பிட்ட மைல்கல் என்று சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, இந்த வெற்றிக்காக சுகாதாரப் பணியாளர்களையும் பாராட்டினார்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... டிரம்ப்பின் நோபல் காய்ச்சல்!

கொல்கத்தாவில் மாணவி பாலியல் வன்கொடுமை: ‘தனியாகச் சென்ற மாணவி மீதே தவறு’ - ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது நடவடிக்கை!

கொல்கத்தா: கொல்கத்தாவில் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரிக்கு தனியாகச் சென்றது தவறு என்று மேற்கு வங்கத்தில் ஆளும... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் மண் சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பலி

ராஜஸ்தானில் குழாய் பதிக்க மண் தோண்டியபோது அது சரிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர். ராஜஸ்தானின் பரத்பூரில் ஞாயிற்றுக்கிழமை காலை குழாய் பதிக்க தோண்டும் பணியில் ஈடுபட்டபோது மண் திடீரென சரிந்து விழுந்தத... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே இரு உடல்கள் மீட்பு

ராஜஸ்தானில் இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே சிதைந்த நிலையில் இரு உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே மைனர் பெ... மேலும் பார்க்க

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்- 3 பேர் பலி, 50க்கும் மேற்பட்டோர் காயம்

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் பலியானார்கள். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பூரியில் உள்ள குந்திச்சா கோயிலுக்கு முன்னால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்ப... மேலும் பார்க்க

பிஇ கட்-ஆஃப் அதிகரிக்கும்: கல்வியாளா்கள் தகவல்

நிகழாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும் என கல்வியாளா்கள் தெரிவித்தனா்.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.... மேலும் பார்க்க

உத்தரகாசியில் மேக வெடி: தொழிலாளர்கள் 9 பேர் மாயம்

உத்தரகாசியில் ஏற்பட்ட மேக வெடிப்பில் தொழிலாளர்கள் 9 பேர் மாயமானார்கள். உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் யமுனோத்ரி கோயிலுக்குச் செல்லும் வழியில் பர்கோட் பகுதியில் சிலாய் வளைவு அருகே ஞாயிற்றுக... மேலும் பார்க்க