பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் மூவர் பலி; மன்னிப்பு கேட்ட ஒடிஷா முதல்வர்
2015-ல் 25 கோடி பேர்; தற்போது 95 கோடி பேருக்கு பயன்! பிரதமர் மோடி பெருமிதம்!
இந்தியாவில் 95 கோடி பேர் சமூகப் பாதுகாப்பு சலுகையைப் பயன்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இதன்படி, ஜூன் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று நடைபெற்ற 123 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் சமூகப் பாதுகாப்பு சலுகை குறித்து பிரதமர் மோடி பேசினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் ஏதேனும் ஒரு சமூகப் பாதுகாப்பு சலுகையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதுதொடர்பான அறிக்கையை சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்டுள்ளது.
இந்திய மக்கள்தொகையில் 64 சதவிகிதத்துக்கும் அதிகமானோர், ஏதேனும் ஒரு சமூகப் பாதுகாப்பு சலுகையைப் பயன்படுத்தி வருவதாக அறிக்கையில் கூறுகிறது.
2015 வரையில் அரசின் திட்டங்கள் 25 கோடிக்கும் குறைவான மக்களையே சென்றடைந்தன. ஆனால், தற்போது 95 கோடி பேர் சமூகப் பாதுகாப்பு சலுகையால் பயனடைகின்றனர்.
சுகாதாரம் முதல் சமூகப் பாதுகாப்பு வரையில், ஒவ்வொரு துறையிலும் இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறி வருகிறது.
இதன் மூலம் சமூக நீதி வெளிக்கொணரப்படுகிறது. இந்த வெற்றிகள் அனைத்தும், வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது; இந்தியாவின் ஒவ்வோர் அடியிலும் வலுப் பெறும் என்ற நம்பிக்கையும் தருகிறது என்று தெரிவித்தார்.
மேலும், இந்தியாவை டிராக்கோமா (பாக்டீரியா நோய்த் தொற்று) இல்லாத நாடாக உலக சுகாதார அமைப்பு அறிவித்ததை, குறிப்பிட்ட மைல்கல் என்று சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, இந்த வெற்றிக்காக சுகாதாரப் பணியாளர்களையும் பாராட்டினார்.
இதையும் படிக்க:சொல்லப் போனால்... டிரம்ப்பின் நோபல் காய்ச்சல்!