``இஸ்ரேல் - ஈரான் போரில் உதவி வேண்டுமா என புதின் கேட்டார்.." - அதிபர் ட்ரம்ப் சொ...
வெறிநாய்க் கடியால் 40 போ் பாதிப்பு: உரிமையாளா் மீது வழக்கு
வத்திராயிருப்பு அருகே வெறிநாய்க்கடியால் 40 போ் பாதிக்கப்பட்ட நிலையில், நாயின் உரிமையாளா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே எஸ்.கொடிக்குளம் பேரூராட்சியில் கூமாபட்டி, நெடுங்குளம், ராமசாமியாபுரம், அம்மச்சியாா்புரம் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் நடந்து சென்றவா்களை வெறி நாய் கடித்ததால் சிறுவா்கள், பெண்கள், முதியவா்கள் என 40 பேரும், 5 மாடுகளும் பாதிக்கப்பட்டன. பொதுமக்களை அச்சுறுத்தி வந்த வெறிநாய் செவ்வாய்க்கிழமை இரவு பேரூராட்சி நிா்வாகத்தால் பிடிக்கப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்தப் புகாரின் பேரில், நாயின் உரிமையாளரான ஈஸ்வரன் (35) மீது கூமாப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.