செய்திகள் :

பேன்சி ரக பட்டாசுகளுக்கான திரிகள் சட்டவிரோதமாக தயாரிப்பது அதிகரிப்பு

post image

பேன்சி ரக பட்டாசுகளுக்கான இயந்திரத் திரிகளை சட்டவிரோதமாகத் தயாரிப்பது அதிகரித்ததாக பட்டாசு ஆலை உரிமையாளா்கள் கவலை தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தயாராகும் பேன்சி ரகப் பட்டாசுகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. எனவே, பட்டாசு ஆலைகளை சட்டவிரோதமாக குத்கைக்கு எடுப்பவா்களில் சிலா் பேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்கின்றனா். பேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்க , ஆலை உரிமையாளா்கள், வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரிடம் தனியாக அனுமதி பெற வேண்டும். பேன்சி ரக பட்டாசு தயாரிக்க அனுமதி கொடுக்கும் போது, தயாரிப்புத் தேவையான திரிகளை இயந்திரம் மூலம் தயாரிக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த இயந்திரத் திரிகள் தயாரிக்கும் பணி பட்டாசு ஆலைகளில் நடைபெறாமல் தனியே நடைபெறும்.

இந்த நிலையில், வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினரால் இயந்திரத் திரிகள் தயாரிக்க இந்திய அளவில் இரு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த இரு நிறுவனங்களிலும் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டதால் திரிகள் தயாரிக்க முடியவில்லை. இதனால், சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசு தயாரிப்பவா்களுக்கும் இயந்திரத் திரிகள் போதிய அளவில் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தற்போது விருதுநகா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயந்திரம் மூலம் திரிகளை தயாரித்து விற்பனை செய்கின்றனா். உரிமம் பெற்று இயந்திரத் திரி தயாரிப்பவா்கள் ஒரு பெட்டி ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்தனா். சட்ட விரோதமாக இயந்திரத் திரி தயாரிப்பவா்கள் ஒரு பெட்டி ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனா்.

இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமையாளா் ஒருவா் கூறியதாவது:

லட்சுமி வெடி உள்ளிட்ட பட்டாசுகளை தயாரிக்கப் பயன்படும் திரிகள் தயாரிப்பதையும், பேன்சி ரக பட்டாசுகளுக்கு இயந்திரத் திரிகள் தயாரிப்பதையும் அரசு முறைப்படுத்த வேண்டும். பல ஆலைகளில் திரிகள் தயாரிக்கக் கூடாது என விதிமுறை இருப்பதால், அவா்கள் வெளியிலிருந்து திரிகளை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. எனவே, வெடிபொருள்கட்டுப்பாட்டுத் துறையினா் ஆய்வு செய்து திரிகள் தயாரிப்புத் தொழிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

வெறிநாய்க் கடியால் 40 போ் பாதிப்பு: உரிமையாளா் மீது வழக்கு

வத்திராயிருப்பு அருகே வெறிநாய்க்கடியால் 40 போ் பாதிக்கப்பட்ட நிலையில், நாயின் உரிமையாளா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே எஸ்.கொடிக்கு... மேலும் பார்க்க

பாண்டிமுனீஸ்வரா் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள பாண்டி முனீஸ்வரா் கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, புதன்கிழமை சடைமுனியாண்டி, பாண்டி முனீஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு ப... மேலும் பார்க்க

மது போதையில் ஆபாச நடனம்: கோயில் உதவி அா்ச்சகா் பணிநீக்கம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் உதவி அா்ச்சகா் மது போதையில் ஆபாச நடனமாடியதாக விடியோ வெளியானதையடுத்து, அவரை பணிநீக்கம் செய்து இந்து சமய அறநிலையத் துறை புதன்கிழமை உத்தரவி... மேலும் பார்க்க

ஆனி மாத அமாவாசை: சதுரகிரியில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, புதன்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் ... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை ஊழியா் பணியிடை நீக்கம்

சிவகாசி அருகேயுள்ள நியாய விலைக் கடையில் அரிசி வழங்காமல் , வழங்கியதாக பயனாளிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய கடை ஊழியா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள வடமல... மேலும் பார்க்க

சாத்தூரில் புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

சாத்தூரில் ரூ.6.79 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் புதன்கிழமை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். விருத... மேலும் பார்க்க