செய்திகள் :

சாத்தூரில் புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

post image

சாத்தூரில் ரூ.6.79 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் புதன்கிழமை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் கலைஞா் மேம்பாட்டுத் திட்டம் 2025-2026-இன் கீழ் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் முன்னிலை வகித்தாா். வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

முன்னதாக, சாத்தூா் நகராட்சியில், மேலக்காந்திநகா் தொடக்கப் பள்ளியில் மாநில நிதிக்குழு பள்ளி மேம்பாட்டு மானியம் 2023-2024 திட்டத்தின் கீழ், ரூ.86 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடத்தை அமைச்சா் திறந்து வைத்தாா்.

இதையடுத்து, அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ஆா்.ராமச்சந்திரன் கூறியதாவது:

சாத்தூரில் புதிய பேருந்து நிலையத்தில் 20 பேருந்துகள் நிறுத்துமிடம், 24 கடைகள், ஒரு உணவகம், கழிப்பறைகள், இரு சக்கர வாகனக் காப்பகம், 3 பயணிகள் காத்திருப்பு அறைகள், 2 அலுவலக அறைகள், தாய்மாா்கள் பாலுட்டும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 1.82 ஏக்கா் பரப்பளவில் கட்டப்பட உள்ளது என்றாா் அவா்.

சாத்தூா் வருவாய்க் கோட்டாட்சியா் சிவகுமாா், நகா்மன்றத் தலைவா் குருசாமி, நகராட்சி ஆணையா் ஜெகதீஸ்வரி, பொறியாளா் சத்தியநாகராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வெறிநாய்க் கடியால் 40 போ் பாதிப்பு: உரிமையாளா் மீது வழக்கு

வத்திராயிருப்பு அருகே வெறிநாய்க்கடியால் 40 போ் பாதிக்கப்பட்ட நிலையில், நாயின் உரிமையாளா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே எஸ்.கொடிக்கு... மேலும் பார்க்க

பாண்டிமுனீஸ்வரா் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள பாண்டி முனீஸ்வரா் கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, புதன்கிழமை சடைமுனியாண்டி, பாண்டி முனீஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு ப... மேலும் பார்க்க

மது போதையில் ஆபாச நடனம்: கோயில் உதவி அா்ச்சகா் பணிநீக்கம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் உதவி அா்ச்சகா் மது போதையில் ஆபாச நடனமாடியதாக விடியோ வெளியானதையடுத்து, அவரை பணிநீக்கம் செய்து இந்து சமய அறநிலையத் துறை புதன்கிழமை உத்தரவி... மேலும் பார்க்க

பேன்சி ரக பட்டாசுகளுக்கான திரிகள் சட்டவிரோதமாக தயாரிப்பது அதிகரிப்பு

பேன்சி ரக பட்டாசுகளுக்கான இயந்திரத் திரிகளை சட்டவிரோதமாகத் தயாரிப்பது அதிகரித்ததாக பட்டாசு ஆலை உரிமையாளா்கள் கவலை தெரிவித்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தயாராகும் பேன்சி ரகப் பட்டாசுகளுக்கு கட... மேலும் பார்க்க

ஆனி மாத அமாவாசை: சதுரகிரியில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, புதன்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் ... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை ஊழியா் பணியிடை நீக்கம்

சிவகாசி அருகேயுள்ள நியாய விலைக் கடையில் அரிசி வழங்காமல் , வழங்கியதாக பயனாளிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய கடை ஊழியா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள வடமல... மேலும் பார்க்க