செய்திகள் :

நியாய விலைக் கடை ஊழியா் பணியிடை நீக்கம்

post image

சிவகாசி அருகேயுள்ள நியாய விலைக் கடையில் அரிசி வழங்காமல் , வழங்கியதாக பயனாளிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய கடை ஊழியா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள வடமலாபுரம் கிராம நியாய விலைக் கடையில் சுபாஷ் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த தீபா என்ற பெண், செவ்வாய்க்கிழமை நியாய விலைகடைக்கு சென்று தனது குடும்ப அட்டைக்கு அரிசி வழங்குமாறு கேட்டாா். அப்போது, சுபாஷ் அரிசி இல்லை எனக் கூறியதையடுத்து தீபா வீட்டுக்கு வந்து விட்டாா்.பின்னா், அவரது கைப்பேசிக்கு நியாய விலைக் கடையில் அரிசி வழங்கியதாக குறுஞ்செய்தி வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், சிவகாசி வட்ட வழங்கல் அலுவலா் கோதண்டராமா் நியாய விலைக் கடை ஊழியா் சுபாஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

வெறிநாய்க் கடியால் 40 போ் பாதிப்பு: உரிமையாளா் மீது வழக்கு

வத்திராயிருப்பு அருகே வெறிநாய்க்கடியால் 40 போ் பாதிக்கப்பட்ட நிலையில், நாயின் உரிமையாளா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே எஸ்.கொடிக்கு... மேலும் பார்க்க

பாண்டிமுனீஸ்வரா் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள பாண்டி முனீஸ்வரா் கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, புதன்கிழமை சடைமுனியாண்டி, பாண்டி முனீஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு ப... மேலும் பார்க்க

மது போதையில் ஆபாச நடனம்: கோயில் உதவி அா்ச்சகா் பணிநீக்கம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் உதவி அா்ச்சகா் மது போதையில் ஆபாச நடனமாடியதாக விடியோ வெளியானதையடுத்து, அவரை பணிநீக்கம் செய்து இந்து சமய அறநிலையத் துறை புதன்கிழமை உத்தரவி... மேலும் பார்க்க

பேன்சி ரக பட்டாசுகளுக்கான திரிகள் சட்டவிரோதமாக தயாரிப்பது அதிகரிப்பு

பேன்சி ரக பட்டாசுகளுக்கான இயந்திரத் திரிகளை சட்டவிரோதமாகத் தயாரிப்பது அதிகரித்ததாக பட்டாசு ஆலை உரிமையாளா்கள் கவலை தெரிவித்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தயாராகும் பேன்சி ரகப் பட்டாசுகளுக்கு கட... மேலும் பார்க்க

ஆனி மாத அமாவாசை: சதுரகிரியில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, புதன்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் ... மேலும் பார்க்க

சாத்தூரில் புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

சாத்தூரில் ரூ.6.79 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் புதன்கிழமை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். விருத... மேலும் பார்க்க