செய்திகள் :

இந்திய கேப்டன் சூர்யகுமாருக்கு அறுவைச் சிகிச்சை..! மீண்டும் எப்போது விளையாடுவார்?

post image

இந்தியாவின் டி20 கேப்டன் சூர்யகுமார் தனக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாகக் கூறியுள்ளார்.

ஜெர்மனி மியூனிக்கில் குடலிறக்கத்துக்காக அறுவைச் சிகிச்சை நடைபெற்றுள்ளது. தற்போது, ஓய்வு எடுத்து வருகிறார்.

கடைசியாக ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல சாதனைகளை சூர்யகுமார் யாதவ் நிகழ்த்தினார்.

ஒரு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்களாக 618-ஆக இருந்தது. அந்த சாதனை சச்சின் கைவசம் இருந்தது.

சூர்யகுமார் யாதவ் இந்த சீசனில் 14 போட்டிகளில் 640 ரன்களை கடந்து (717) சச்சின் சாதனையை முறியடித்தார்.

34 வயதாகும் சூர்யகுமார் யாதவ் மிடில் ஆர்டராக இந்திய அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் விளையாடுகிறார்.

தொடக்க வீரர்கள் செய்யும் சாதனைகளை எல்லாம் மிடில் ஆர்டரில் இறங்கி செய்வது மிகவும் அதிசயமானது என பலரும் புகழ்ந்து வருகிறார்கள்.

தொடர்ச்சியாக 25க்கும் அதிகமான ரன்களை 16 முறை அடித்து புதிய சாதனையையும் இந்த ஐபிஎல் தொடரில் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்துடன் ஆக. 26ஆம் தேதி டி20 போட்டியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவைச் சிகிச்சை புகைப்படத்தைப் பகிர்ந்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் சூர்யகுமார் யாதவ், “வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை நடந்தது. குணமாகி வருகிறேன். மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆவலுடன் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Summary

Indias T20I captain Surya kumar Yadav had a successful hernia surgery in Munich, Germany and is currently in recovery.

இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரம்..! மீண்டும் சதமடித்த பதும் நிசாங்கா!

இலங்கை கிரிக்கெட் வீரர் பதும் நிசாங்கா வங்கதேசத்துக்கு எதிராக மீண்டும் சதம் அடித்து அசத்தினார். பதும் நிசாங்கா (27 வயது) கடந்த 2021 முதல் இலங்கை அணியில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். 18 டெஸ்ட... மேலும் பார்க்க

அதிக அரைசதங்கள்: ஜோ ரூட் சாதனை!

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் அதிகமான அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் 2-ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஜோ ரூட் (34 வயது) 2012 முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை, 154 ... மேலும் பார்க்க

மாவட்ட கல்வி அதிகாரியாகும் ரிங்கு சிங்: 8-ஆம் வகுப்பு படித்தவருக்கு இந்தப் பதவியா?

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் உ.பி. மாவட்ட கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 27 வயதாகும் ரிங்கு சிங் ஐபிஎல் தொடரில் 5 சிக்ஸர்கள் அடித்து புகழ்பெற்றார். பின்னர், இந்திய... மேலும் பார்க்க

அப்படி என்ன வன்மம்? ஆஸி. அணிக்கு எதிராக மிரட்டும் ஷமர் ஜோசப்!

ஆஸி. அணிக்கு எதிராக மட்டும் அசத்தலாக பந்துவீசும் மே.இ.தீ. அணி வீரர் ஷமர் ஜோசப் பேசுபொருளாக மாறியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணியும் ஆஸி. அணியும் பாரபடோஸ் திடலில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியி... மேலும் பார்க்க

சர்ச்சையான டிராவிஸ் ஹெட்டின் கேட்ச்: நடுவரின் முடிவு சரியா? தவறா?

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸி. வீரர் டிராவிஸ் ஹெட்டின் கேட்ச்சுக்கு நடுவர் தவறான தீர்ப்பு வழங்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது. மே.இ.தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அண... மேலும் பார்க்க

180-க்கு சுருண்ட ஆஸி: 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் மே.இ.தீ.!

மேற்கிந்தியத் தீவுகள் - ஆஸி. மோதும் முதல் டெஸ்ட் போட்டி சுவாரசியமாகச் சென்று கொண்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸி. 180 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, மே.இ.தீ. அணி 20 ஓவர்கள் முடிவில் 57 ரன்களுக்கு 4 விக்கெட்ட... மேலும் பார்க்க