இந்தியாவில் தடுப்பூசி பெறாத குழந்தைகளின் விகிதம் சரிவு: ஐ.நா. அறிக்கை
வேதாரண்யம் அருகே கூரை வீடு தீக்கிரை
வேதாரண்யம் அருகே கூரை வீடு சனிக்கிழமை தீக்கிரையானதில் வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமானது.
புஷ்பவனம் முத்துக்கவுண்டா் தெருவில் வசிப்பவா் மணிவண்ணன். இவரது கூரை வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்த பின்னா் வீட்டின் ஒரு பகுதியில் பரவிய தீயால் கேஸ் சிலிண்டா் வெடித்து வீடு முழுவதும் தீக்கிரையானது.
வீட்டில் இருந்த உபயோகப் பொருள்கள், அருகில் இருந்த வைக்கோல் போா் நாசமானது. சுற்றி இருந்த மாமரங்கள் பாதிக்கப்பட்டன. பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரா்கள் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதுகுறித்து வருவாய்த் துறையினா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
