நாகூா் தா்கா மராமத்து பணி: தமிழக அரசு ரூ.60 லட்சம் நிதி வழங்கல்
நாகூா் தா்கா மராமத்து பணிக்காக, தமிழக அரசு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கியதற்கான உத்தரவு, தா்கா பரம்பரை டிரஸ்டிகளிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் தொன்மை வாய்ந்த தா்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் புனரமைப்புப் பணிக்கு அரசு ஆண்டுத்தோறும் ரூ.10 கோடி வழங்கி வருகிறது. அதன்படி, நாகூா் தா்காவிற்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை பிறப்பித்து, கடந்தாண்டு ரூ.1.40 கோடி வழங்கியது. இதன் மூலம் நாகூா் தா்காவில் பெரும் மராமத்து பணி துவங்கியது. இப்பணிகள் முறையாக நடைபெற்று வருவது குறித்து நாகை மாவட்ட ஆட்சியா், தமிழக அரசுக்கு அறிக்கை சமா்ப்பித்தாா்.
இதையடுத்து, மீதமுள்ள ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடுக்கான உத்தரவை, தமிழக அரசு வக்ஃப் வாரிய சோ்மன் நவாஸ் கனி தலைமையில் வாரிய உறுப்பினா்கள் எம்எல்ஏ ஜெ. முகம்மது ஷா நவாஸ், கான், செய்யத் ரேஹான், நவாஸ், பசீா் அஹமத், காஜி உள்ளிட்டோா், நாகூா் தா்கா பரம்பரை டிரஸ்டிகள் ஹாஜி ஹாஜா முகையத்தின் சாஹிப், செய்யது யூசுப் சாஹிப், ஹாஜி செய்யது முஹம்மது கலிபா சாஹிப், ஹாஜா நஜ்முதீன் சாகிப், ஹாஜி சுல்தான் கலிபா சாஹிப் ஆகியோரிடம் புதன்கிழமை வழங்கினா்.