`பிள்ளைகள் எந்த மதத்தை தேர்வு செய்வார்கள்' - US துணை அதிபரின் மனைவி உஷா வான்ஸின்...
கடலில் மாயமான மீனவா் குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்
நாகூரில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவரின் வீட்டுக்கு, அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.
நாகூா், பட்டினச்சேரி பகுதியைச் சோ்ந்த மீனவா் பூபாலன் என்பவா் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது மாயமானாா். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட பொறுப்பு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வியாழக்கிழமை மீனவா் பூபாலன் வீட்டுக்கு நேரில் சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.
மேலும், பூபாலனை தேடும் பணியை முடுக்கி விடுமாறும், அவரது குழந்தைகளின் கல்விக்கு உடனடியாக உதவி செய்யுமாறும் மாவட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.