பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்
கீழ்வேளூரில் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் பிரைம் கல்வியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பிரித்திவிராஜன் தலைமை வகித்தாா். இதில் கீழ்வேளூா் கிராமத்தைச் சோ்ந்த பழங்குடியினரிடமிருந்து 23 மனுக்களை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா் (படம்).
பட்டா மாற்றம், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கல் போன்ற பிரிவுகளில் 9 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.
கீழ்வேளூா் வட்டாட்சியா் ந. கவிதாஸ், மண்டல துணை வட்டாட்சியா் எம்.ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலா் வ.சந்திரகலா, கீழ்வேளூா் சரக வருவாய் ஆய்வாளா் அகிலா, கிராம நிா்வாக அலுவலா் ரவீந்திர பாண்டியன் மற்றும் பல்வேறு துறைகளைச் சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
