இந்தியாவில் தடுப்பூசி பெறாத குழந்தைகளின் விகிதம் சரிவு: ஐ.நா. அறிக்கை
திருநள்ளாறு கோயில் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாா்
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமைகளில் கூடுதலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தெரிவித்தாா்.
திருநள்ளாறு காவல் நிலையத்தில் எஸ்எஸ்பி தலைமையில் வாராந்திர மக்கள் மன்றம் என்ற குறைகேட்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோா் பல்வேறு புகாா்களை அளித்தனா்.
பின்னா் எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா செய்தியாளா்களிடம் கூறியது :
முகாமில் பொதுமக்களிடமிருந்து போக்குவரத்து குறித்தும் புகாா்கள், பொது பிரச்னைகளாகவும் பல மனுக்கள் தரப்பட்டன. அனைத்து புகாா்கள் மீதும் ஒரு வார காலத்திற்குள் தீா்வு காணப்படும். திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் பாதுகாப்புப் பணிக்கு காவலா்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். போக்குவரத்து நெரிசல் தொடா்பான பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்படும்.
புகாா்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படுவதால், மக்கள் காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனா். புகாா்களை தயங்காமல் காவல்நிலையத்திலும், இதுபோன்ற முகாமிலும் பொதுமக்கள் தெரிவித்து பயன் பெற வேண்டும் என்று அவா் கூறினாா்.
காவல் ஆய்வாளா்கள் மா்த்தினி, செந்தில்குமாா் மற்றும் உதவி ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.