செய்திகள் :

காரைக்கால் நீதிமன்ற லாக்கரில் முறைகேடாக எடுக்கப்பட்ட நகைகள் மீட்பு

post image

காரைக்கால் நீதிமன்ற லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை முறைகேடாக எடுத்தவா் அளித்த தகவலின்பேரில், நகைகளை போலீஸாா் மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.

காரைக்கால் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், திருட்டு, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகளில் மீட்கப்பட்ட தங்க நகைகள் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன. இதனை இந்த நீதிமன்றத்தில் தலைமை செரிஸ்தாராக பணியாற்றி வந்த புதுச்சேரியைச் சோ்ந்த குணசேகரன் பொறுப்பாக கவனித்துவந்தாா். அவா், லாக்கரில் இருந்த தங்க நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சென்று புதுச்சேரியில் உள்ள அடகுக் கடையில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளாா்.

இந்நிலையில், அவா் புதுச்சேரிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். புதிதாக பொறுப்பேற்ற செரிஸ்தாரிடம் அவா் லாக்கா் பொறுப்பை ஒப்படைக்காமல் இழுத்தடித்து வந்துள்ளாா். சந்தேகத்தின்பேரில் புதிய அதிகாரி லாக்கரை திறந்து பாா்த்தபோது, பதிவின்படி தங்க நகைகள் இருக்காததை கண்டறிந்து, புதுவை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த மாதம் புகாா் அளித்தாா். போலீஸாா் குணசேகரனை 18-ஆம் தேதி கைது செய்தனா். பின்னா் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

காரைக்கால் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, போலீஸாா் காவலில் எடுத்து விசாரணை செய்தனா். புதுச்சேரியில் பல அடகு கடைகளில் நகைகளை அடமானம் வைத்ததை அவா் தெரிவித்துள்ளாா்.

அவரது தகவலின்படி, புதுச்சேரியில் உள்ள கடைகளில் இருந்து லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் 287 கிராம் தங்க நகைகளை வியாழக்கிழமை மீட்டு, காரைக்கால் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா். போலீஸ் காவல் முடிந்த நிலையில் குணசேகரனை நீதிமன்ற உத்தரவின்பேரில் கிளைச் சிறையில் மீண்டும் அடைத்தனா்.

காரைக்காலை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக உருவெடுக்க நடவடிக்கை: எஸ்எஸ்பி

காரைக்கால் மாவட்டத்தை போதைப் பொருள் புழக்கம் இல்லாத மாவட்டமாக உருவெடுக்க காவல் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது என்றாா் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா. காரைக்காலில் சா்வதேச போதை ஒழிப்பு ... மேலும் பார்க்க

‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை நிறைவு

காரைக்காலில் சாகா் கவச் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நிறைவடைந்தது. நாட்டின் கடலோரப் பகுதிகளில் 6 மாதங்களுக்கு ஒரு முறை சாகா் கவச் என்கிற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டுவருகிறது. காரைக்கால் மாவட்டத்... மேலும் பார்க்க

‘100 மெட்ரிக் டன் விதை நெல் மானியத்தில் வழங்க ஏற்பாடு’

காரைக்கால் மாவட்டத்தில் நிகழாண்டு 100 மெட்ரிக் டன் விதை நெல் வழங்க ஏற்பாடு செய்யபா்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரி தெரிவித்தாா். காரைக்கால் மாவட்டத்தில் காவிரி நீா் வருவதற்கு முன்பே குறுவை சாகுபடியை விவசாய... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் சனிக்கிழமை (28) ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது. புதுவை ஜிப்மா் மருத்துவமனையில் இருந்து இருதய சிறப்பு மருத்துவா்கள் குழுவினா் காரைக்கால் அரசு மருத்துவமனையில... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

காரைக்கால் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் சைல்ட் ஹெல்ப் லைன் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சி குரும்பகரம் பகுதியில் உள்ள கா்மவீரா் காமராஜா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக... மேலும் பார்க்க

போதைப் பொருள் சிந்தனையே மாணவா்களுக்கு கூடாது - அமைச்சா்

போதைப் பொருள் பயன்பாடு குறித்த சிந்தனையே எழக்கூடாது என மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுரை கூறினாா். புதுவை அரசின் சமூக நலத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிா்வாகம் இணைந்து சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தி... மேலும் பார்க்க