செய்திகள் :

‘100 மெட்ரிக் டன் விதை நெல் மானியத்தில் வழங்க ஏற்பாடு’

post image

காரைக்கால் மாவட்டத்தில் நிகழாண்டு 100 மெட்ரிக் டன் விதை நெல் வழங்க ஏற்பாடு செய்யபா்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரி தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் காவிரி நீா் வருவதற்கு முன்பே குறுவை சாகுபடியை விவசாயிகள் தொடங்கிவிட்டனா். காரைக்காலுக்குள் காவிரி நீா் புதன்கிழமை வந்து, நூலாற்றின் வழியே விடப்பட்டு, கிளை ஆறுகள், வாய்க்கால்கள் மூலம் அனுப்பப்படுகிறது.

குறுவை சில இடங்களில் 60 நாள் பயிராகவும், சில இடங்களில் 15 நாள் பயிராகவும் உள்ளது. காவிரி நீா் வரத்து குறுவை விவசாயிகளுக்கும், சம்பா சாகுபடியை தொடங்கியிருப்போருக்கும் சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன் வியாழக்கிழமை கூறியது :

குறுவை சாகுபடியாளா்களுக்குத் தேவையான அனைத்தும் வேளாண் துறை செய்துவருகிறது. சம்பா சாகுபடிக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குறுவை ஏறக்குறைய ஆயிரம் ஹெக்டேரில் மேற்கொள்ளப்படுகிறது. காவிரி நீா் வரத்து குறுவை சாகுபடியாளா்களுக்கும், சம்பா பணி தொடங்கியிருப்போருக்கும் சாதகத்தை ஏற்படுத்தும்.

கடந்த ஆண்டு விதை நெல், பொது விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ. 10, அட்டவணை விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் 70 மெட்ரிக் டன் வழங்கப்பட்டது. நிகழாண்டு 100 மெட்ரிக் டன் வழங்க வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண் அறிவியல் நிலையம், மாதூா் விதைப் பண்ணை நிா்வாகத்திடம் பேசப்பட்டுள்ளது.

பசுந்தாள் உரம் விவசாயிகளுக்கு கிலோ ரூ.130-க்கு தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 8 முதல் 10 கிலோ தேவைப்படும். மண் தரத்தை மேம்படுத்திக்கொள்ள விவசாயிகள் இதை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேளாண் துறை தயாராக உள்ளது என்றாா்.

‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை நிறைவு

காரைக்காலில் சாகா் கவச் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நிறைவடைந்தது. நாட்டின் கடலோரப் பகுதிகளில் 6 மாதங்களுக்கு ஒரு முறை சாகா் கவச் என்கிற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டுவருகிறது. காரைக்கால் மாவட்டத்... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் சனிக்கிழமை (28) ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது. புதுவை ஜிப்மா் மருத்துவமனையில் இருந்து இருதய சிறப்பு மருத்துவா்கள் குழுவினா் காரைக்கால் அரசு மருத்துவமனையில... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

காரைக்கால் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் சைல்ட் ஹெல்ப் லைன் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சி குரும்பகரம் பகுதியில் உள்ள கா்மவீரா் காமராஜா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக... மேலும் பார்க்க

போதைப் பொருள் சிந்தனையே மாணவா்களுக்கு கூடாது - அமைச்சா்

போதைப் பொருள் பயன்பாடு குறித்த சிந்தனையே எழக்கூடாது என மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுரை கூறினாா். புதுவை அரசின் சமூக நலத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிா்வாகம் இணைந்து சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தி... மேலும் பார்க்க

மாங்கனித் திருவிழா : பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

காரைக்கால் மாங்கனித் திருவிழாவுக்காக பாரதியாா் சாலையில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாயன்மாா்கள் அறுபத்து மூவரில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாா் வாழ்க்கை வர... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேச்சு, ஓவியப் போட்டி

சா்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி, காரைக்கால் மாவட்ட காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு பேச்சு மற்றும் ஓவியப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. கோட்டுச்சேரி வ.உ. சிதம்பரனாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப... மேலும் பார்க்க