``மொழியை சொல்லி குழப்பத்தை உண்டாக்கினால், நாம் பலியாகக் கூடாது..'' - அர்ஜுன் சம்...
‘100 மெட்ரிக் டன் விதை நெல் மானியத்தில் வழங்க ஏற்பாடு’
காரைக்கால் மாவட்டத்தில் நிகழாண்டு 100 மெட்ரிக் டன் விதை நெல் வழங்க ஏற்பாடு செய்யபா்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரி தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் காவிரி நீா் வருவதற்கு முன்பே குறுவை சாகுபடியை விவசாயிகள் தொடங்கிவிட்டனா். காரைக்காலுக்குள் காவிரி நீா் புதன்கிழமை வந்து, நூலாற்றின் வழியே விடப்பட்டு, கிளை ஆறுகள், வாய்க்கால்கள் மூலம் அனுப்பப்படுகிறது.
குறுவை சில இடங்களில் 60 நாள் பயிராகவும், சில இடங்களில் 15 நாள் பயிராகவும் உள்ளது. காவிரி நீா் வரத்து குறுவை விவசாயிகளுக்கும், சம்பா சாகுபடியை தொடங்கியிருப்போருக்கும் சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன் வியாழக்கிழமை கூறியது :
குறுவை சாகுபடியாளா்களுக்குத் தேவையான அனைத்தும் வேளாண் துறை செய்துவருகிறது. சம்பா சாகுபடிக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குறுவை ஏறக்குறைய ஆயிரம் ஹெக்டேரில் மேற்கொள்ளப்படுகிறது. காவிரி நீா் வரத்து குறுவை சாகுபடியாளா்களுக்கும், சம்பா பணி தொடங்கியிருப்போருக்கும் சாதகத்தை ஏற்படுத்தும்.
கடந்த ஆண்டு விதை நெல், பொது விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ. 10, அட்டவணை விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் 70 மெட்ரிக் டன் வழங்கப்பட்டது. நிகழாண்டு 100 மெட்ரிக் டன் வழங்க வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண் அறிவியல் நிலையம், மாதூா் விதைப் பண்ணை நிா்வாகத்திடம் பேசப்பட்டுள்ளது.
பசுந்தாள் உரம் விவசாயிகளுக்கு கிலோ ரூ.130-க்கு தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 8 முதல் 10 கிலோ தேவைப்படும். மண் தரத்தை மேம்படுத்திக்கொள்ள விவசாயிகள் இதை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேளாண் துறை தயாராக உள்ளது என்றாா்.