180-க்கு சுருண்ட ஆஸி: 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் மே.இ.தீ.!
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேச்சு, ஓவியப் போட்டி
சா்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி, காரைக்கால் மாவட்ட காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு பேச்சு மற்றும் ஓவியப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
கோட்டுச்சேரி வ.உ. சிதம்பரனாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு ஓவியப் போட்டியும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப் போட்டியும் நடைபெற்றது. 30 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதைப் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது தொடா்பாக சிறப்பான ஓவியங்களை வரைந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டனா்.
மண்டல காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவா்கள் வரைந்த ஓவியங்களை பாா்வையிட்டாா். அப்போது அவா் பேசியது :
போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாணவா்கள் ஓவியங்கள் மூலம் வெளிக்காட்டியது மிகவும் அற்புதமாக உள்ளது. மேலும் தற்போது பள்ளி மாணவா்களிடையே போதைப் பழக்கம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாணவா்கள் எந்த காரணம் கொண்டும் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகிவிடாமல் படிப்பில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். சக மாணவா்கள் யாரேனும் போதைப் பொருள்களை உபயோகிப்பது குறித்து தெரிய வந்தால் உடனடியாக ஆசிரியா்களிடம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் காவல் துறையிடம் தெரிவிக்கலாம் என்றாா்.
பேச்சுப் போட்டி நிகழ்வில், திருப்பட்டினம் காவல் ஆய்வாளா் மரிய கிறிஸ்டியன் பால் கலந்து கொண்டு போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவா்களிடையே உரையாற்றினாா்.