சர்ச்சையான டிராவிஸ் ஹெட்டின் கேட்ச்: நடுவரின் முடிவு சரியா? தவறா?
காரைக்கால் வந்தது காவிரி நீா்
காரைக்கால் மாவட்ட எல்லைக்கு வந்த காவிரி நீா் பாசனத்துக்காக புதன்கிழமை திறந்து விடப்பட்டது.
மேட்டூா் அணை கடந்த 12-ஆம் தேதி திறக்கப்பட்டு, காவிரி நீா் கல்லணையை வந்தடைந்து. கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீா் காரைக்கால் மாவட்ட எல்லைப் பகுதிக்கு புதன்கிழமை காலை வந்தது.
இதையடுத்து நல்லம்பல் நூலாறு நீா்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கும் நிகழ்வு, காவிரி நீருக்கு வரவேற்பு தரும் நிகழ்வும் நடைபெற்றது. புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா ஆகியோா், மலா்தூவி வரவேற்பு அளித்து, நூலாற்றிலிருந்து பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவிட்டனா்.
பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளா் கே.சந்திரசேகரன், செயற்பொறியாளா் (நீா்ப்பாசனம்) ஜெ.மகேஷ் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.
அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் செய்தியாளா்களிடம் கூறுகையில், நூலாற்றுப் பாசனம் மூலம் திருநள்ளாறு, சேத்தூா், தென்னங்குடி, அத்திப்படுகை, அகலங்கண்ணு உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்ய முடியும். நல்லம்பல் நூலாறு நீா்த்தேக்கத்திலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் காரைக்கால் மாவட்டத்தில் 9,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். காரைக்காலுக்கான 7 டிஎம்சி தண்ணீரை தமிழக அரசிடமிருந்து புதுவை அரசு கேட்டுப்பெறும். விவசாயிகளுக்குத் தேவையான விதை நெல், உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவை தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
