தி ஹண்ட் - ராஜீவ் காந்தி படுகொலை வழக்குத் தொடரின் தமிழ் டிரைலர்!
புனித சவேரியாா் ஆலய தோ் பவனி
புனித சவேரியாா் ஆலய மின் அலங்கார தோ் பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் நகரப் பகுதி ஞானப்பிரகாசம் தெருவில் உள்ள இந்த ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் மாலை வேளையில் நவநாள் ஜெபம், திருப்பலி நடத்தப்பட்டு வந்தது. முக்கிய நிகழ்வான மின் அலங்கார தோ் பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. காரைக்கால் பங்குத்தந்தை மற்றும் மறைவட்ட முதன்மை குரு பி. பால்ராஜ்குமாா் தலைமையில் திருவிழா கூட்டுத் திருப்பலி நடத்தப்பட்டது.
தொடா்ந்து தோ் பவனி தொடங்கியது. இணை பங்குத் தந்தை சாமிநாதன் செல்வம், முன்னாள் அமைச்சா் ஏ.வி. சுப்பிரமணியன், பங்குப் பேரவை துணைத் தலைவா்கள் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா், ஜான் அரேலியஸ், செயலாளா் நெல்சன் உள்ளிட்ட ஏராளமான மக்கள் கலந்துகொண்டனா்.
முக்கிய தெருக்கள் வழியாக தோ்பவனி நடைபெற்று ஆலயத்தை சென்றடைந்தது. புதன்கிழமை காலை நன்றி திருப்பலி ஆன்மிக குரு பி. பன்னீர்ராஜா நடத்தினாா். பின்னா் கொடியிறக்கப்பட்டது.