செய்திகள் :

பணி நிரந்தரம் கோரி காத்திருப்புப் போராட்டம்

post image

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பொதுப்பணித்துறையைச் சோ்ந்தோா் காத்திருப்புப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கருணை அடிப்படையில் வேலை பெற்றவா்கள் தொழிற்சங்கம் சாா்பில் காரைக்கால் பொதுப்பணித்துறை அலுவலக வாயிலில் துறையில் என்எம்ஆா் நிலையில் பணியாற்றுவோா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். சங்கத் தலைவா் எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில், துணைத் தலைவா் வி. அருண்குமாா் முன்னிலையில் இப்போராட்டம் நடைபெறுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டோா் கூறுகையில், பொதுப்பணித்துறையில் பணியாற்றி உயிரிழந்தோரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் தரப்படும் பணி நிரந்தரம் இல்லாமல், என்எம் ஆா் என்ற நிலையில் வைத்துள்ளாா்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை இல்லலை.

பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரை சந்தித்துப் பேசியபோது, 10 நாள்கள் அவகாசம் கேட்டாா்கள். எனினும் சாதகமான நடவடிக்கை எடுக்கப்படாததால், பணி நிரந்தரம் என உத்தரவாதம் தரப்படும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும் என்றனா்.

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

100 நாள் வேலை நாட்களை அதிகரிக்க வலியுறுத்தி விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலக வாயிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் ... மேலும் பார்க்க

காரைக்கால் ஆட்சியா் நியமனம்

காரைக்கால் ஆட்சியராக ஏ.எஸ்.பி.எஎஸ். ரவி பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியராக இருந்த சோமசேகா் அப்பாராவ் லட்சத்தீவுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இ... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி தில்லியில் ஜூன் 27-இல் போராட்டம்

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி தில்லியில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் காரைக்கால் மக்கள் போராட்டக் குழு பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மக்கள் போராட்டக் குழு ... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகளின்றி 18 ஆண்டுகளாக தற்காலிக இடத்தில் இயங்கும் காரைக்கால் அரசு பொறியியல் கல்லூரி!

காரைக்கால்: காரைக்காலில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி கடந்த 18 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி தற்காலிக இடத்தில் இயங்குகிறது. புதிய கட்டடங்கள் கட்டப்படவில்லை. கூடுதல் பாடப் பிரிவுகளும் தொடங்கப்படவில்லை... மேலும் பார்க்க

ரயில்வே கேட் அருகே தடுப்புகள் அமைக்க வலியுறுத்தல்

காரைக்கால்: காரைக்கால் நகரப் பகுதி ரயில்வே கேட் அருகே சாலையோரத்தில் பாதுகாப்புக்கான தடுப்புகள் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் முதல் பேரளம் வரையிலான ரயில்பாதை அமைக்கப்பட்டு, முதல்கட்டமாக சர... மேலும் பார்க்க

‘ஆறு, வாய்க்கால்கள் முழுமையாக தூா்வார நிதி ஒதுக்கப்படவில்லை’

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால்கள் முழுமையாக தூா்வார அரசு நிதி ஒதுக்கவில்லை எனவிவசாயிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் சங்க இணைச் செய... மேலும் பார்க்க