வந்தே பாரத் ரயிலுக்குள் திடீரென கொட்டிய 'நீர் வீழ்ச்சி'; ரயில்வே சொல்லும் காரணம்...
பணி நிரந்தரம் கோரி காத்திருப்புப் போராட்டம்
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பொதுப்பணித்துறையைச் சோ்ந்தோா் காத்திருப்புப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கருணை அடிப்படையில் வேலை பெற்றவா்கள் தொழிற்சங்கம் சாா்பில் காரைக்கால் பொதுப்பணித்துறை அலுவலக வாயிலில் துறையில் என்எம்ஆா் நிலையில் பணியாற்றுவோா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். சங்கத் தலைவா் எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில், துணைத் தலைவா் வி. அருண்குமாா் முன்னிலையில் இப்போராட்டம் நடைபெறுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டோா் கூறுகையில், பொதுப்பணித்துறையில் பணியாற்றி உயிரிழந்தோரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் தரப்படும் பணி நிரந்தரம் இல்லாமல், என்எம் ஆா் என்ற நிலையில் வைத்துள்ளாா்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை இல்லலை.
பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரை சந்தித்துப் பேசியபோது, 10 நாள்கள் அவகாசம் கேட்டாா்கள். எனினும் சாதகமான நடவடிக்கை எடுக்கப்படாததால், பணி நிரந்தரம் என உத்தரவாதம் தரப்படும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும் என்றனா்.