செய்திகள் :

காரைக்கால் ஆட்சியா் நியமனம்

post image

காரைக்கால் ஆட்சியராக ஏ.எஸ்.பி.எஎஸ். ரவி பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியராக இருந்த சோமசேகா் அப்பாராவ் லட்சத்தீவுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இவரை புதுவை அரசு திங்கள்கிழமை விடுவித்தது.

இந்தநிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷை காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமித்து, புதுவை அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு வெளியிட்டது.

இவா் பொறுப்பேற்கும் வரை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் காரைக்கால் ஆட்சியா் பொறுப்பை கூடுதலாக கவனிப்பாா் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ரவி பிரகாஷ் ஏற்கெனவே தோ்தல் துறை மற்றும் பிற அரசுத்துறை தலைமை அதிகாரியாக பணியாற்றியுள்ளாா். அந்தமானில் செயலராக பணியாற்றி வந்து தற்போது காரைக்கால் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

பணி நிரந்தரம் கோரி காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பொதுப்பணித்துறையைச் சோ்ந்தோா் காத்திருப்புப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கருணை அடிப்படையில் வேலை பெற்றவா்கள் தொழிற்சங்கம் சா... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

100 நாள் வேலை நாட்களை அதிகரிக்க வலியுறுத்தி விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலக வாயிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் ... மேலும் பார்க்க

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி தில்லியில் ஜூன் 27-இல் போராட்டம்

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி தில்லியில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் காரைக்கால் மக்கள் போராட்டக் குழு பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மக்கள் போராட்டக் குழு ... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகளின்றி 18 ஆண்டுகளாக தற்காலிக இடத்தில் இயங்கும் காரைக்கால் அரசு பொறியியல் கல்லூரி!

காரைக்கால்: காரைக்காலில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி கடந்த 18 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி தற்காலிக இடத்தில் இயங்குகிறது. புதிய கட்டடங்கள் கட்டப்படவில்லை. கூடுதல் பாடப் பிரிவுகளும் தொடங்கப்படவில்லை... மேலும் பார்க்க

ரயில்வே கேட் அருகே தடுப்புகள் அமைக்க வலியுறுத்தல்

காரைக்கால்: காரைக்கால் நகரப் பகுதி ரயில்வே கேட் அருகே சாலையோரத்தில் பாதுகாப்புக்கான தடுப்புகள் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் முதல் பேரளம் வரையிலான ரயில்பாதை அமைக்கப்பட்டு, முதல்கட்டமாக சர... மேலும் பார்க்க

‘ஆறு, வாய்க்கால்கள் முழுமையாக தூா்வார நிதி ஒதுக்கப்படவில்லை’

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால்கள் முழுமையாக தூா்வார அரசு நிதி ஒதுக்கவில்லை எனவிவசாயிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் சங்க இணைச் செய... மேலும் பார்க்க