"எங்களுக்கு டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது; வெறும் 6-8 சீட்டுகளை..." - திருமா ...
காரைக்கால் ஆட்சியா் நியமனம்
காரைக்கால் ஆட்சியராக ஏ.எஸ்.பி.எஎஸ். ரவி பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியராக இருந்த சோமசேகா் அப்பாராவ் லட்சத்தீவுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இவரை புதுவை அரசு திங்கள்கிழமை விடுவித்தது.
இந்தநிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷை காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமித்து, புதுவை அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு வெளியிட்டது.
இவா் பொறுப்பேற்கும் வரை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் காரைக்கால் ஆட்சியா் பொறுப்பை கூடுதலாக கவனிப்பாா் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ரவி பிரகாஷ் ஏற்கெனவே தோ்தல் துறை மற்றும் பிற அரசுத்துறை தலைமை அதிகாரியாக பணியாற்றியுள்ளாா். அந்தமானில் செயலராக பணியாற்றி வந்து தற்போது காரைக்கால் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.