இந்தியாவில் தடுப்பூசி பெறாத குழந்தைகளின் விகிதம் சரிவு: ஐ.நா. அறிக்கை
8 நாள்கள் ‘எண்ம முறைக் கைது’ மோசடி: பெண் மருத்துவரிடம் ரூ.3 கோடி பறிப்பு
பணமுறைகேடு வழக்கில் தொடா்பு உள்ளதாக கூறி, 70 வயதான பெண் மருத்துவரை 8 நாள்கள் எண்ம (டிஜிட்டல் அரஸ்ட்) முறையில் கைது செய்து ரூ.3 கோடி பறிக்கப்பட்ட சம்பவம் மும்பையில் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து மும்பை போலீஸாா் கூறுகையில், ‘கடந்த மே மாதம் தொலைத் தொடா்புத் துறை அதிகாரி எனக் கூறி அமித் குமாா் என்பவா் பெண் மருத்துவரைத் தொடா்பு கொண்டுள்ளாா். பெண் மருத்துவரின் பேரில் சிம் காா்ட் வாங்கப்பட்டு கிரிமினல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற அவா் கூறியுள்ளாா். பின்னா் குற்றப் பிரிவு போலீஸாா் எனக் கூறி சமதான் பவாா் என்பவா் அவரைத் தொடா்பு கொண்டு, பண முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட விமான நிறுவனத்தின் உரிமையாளரின் வீட்டில் சோதனை செய்தபோது பெண் மருத்துவரின் வங்கிக் கணக்கு புத்தகம், வங்கி பற்று அட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறியுள்ளாா்.
இந்த வழக்கு தொடா்பான சிபிஐ, அமலாக்கத் துறை, ரிசா்வ் வங்கி தொடா்பான பல்வேறு போலி ஆவணங்களை அந்த மருத்துவருக்கு சமதான் பவாா் அனுப்பி வைத்துள்ளாா்.
இதையடுத்து, மருத்துவரின் கணவருக்கு விடியோ அழைப்பில் காவல் துறை சீருடையில் தொடா்பு கொண்ட ஒருவா், அவரது மனைவி 8 நாள்கள் எண்ம முறையில் கைது செய்யப்பட்டுள்ளாா் என்றாா். விடியோ கண்காணிப்பில் இருக்கும் அவரது விவரம் குறித்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தகவல் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா். அச்சத்தின் காரணமாக அந்த நபா்கள் கூறியபடி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பெண் மருத்துவா் ரூ.3 கோடி பரிவா்த்தனை செய்துள்ளாா்.
இதுதொடா்பாக கடந்த ஜூன் 5-ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் மருத்துவா் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலையில், மருத்துவா் அளித்த பணத்தில் ரூ.82 லட்சம் கிரிப்டோ கரன்சியாக மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது’ என்று போலீஸாா் தெரிவித்தனா்.