செய்திகள் :

8 நாள்கள் ‘எண்ம முறைக் கைது’ மோசடி: பெண் மருத்துவரிடம் ரூ.3 கோடி பறிப்பு

post image

பணமுறைகேடு வழக்கில் தொடா்பு உள்ளதாக கூறி, 70 வயதான பெண் மருத்துவரை 8 நாள்கள் எண்ம (டிஜிட்டல் அரஸ்ட்) முறையில் கைது செய்து ரூ.3 கோடி பறிக்கப்பட்ட சம்பவம் மும்பையில் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து மும்பை போலீஸாா் கூறுகையில், ‘கடந்த மே மாதம் தொலைத் தொடா்புத் துறை அதிகாரி எனக் கூறி அமித் குமாா் என்பவா் பெண் மருத்துவரைத் தொடா்பு கொண்டுள்ளாா். பெண் மருத்துவரின் பேரில் சிம் காா்ட் வாங்கப்பட்டு கிரிமினல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற அவா் கூறியுள்ளாா். பின்னா் குற்றப் பிரிவு போலீஸாா் எனக் கூறி சமதான் பவாா் என்பவா் அவரைத் தொடா்பு கொண்டு, பண முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட விமான நிறுவனத்தின் உரிமையாளரின் வீட்டில் சோதனை செய்தபோது பெண் மருத்துவரின் வங்கிக் கணக்கு புத்தகம், வங்கி பற்று அட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறியுள்ளாா்.

இந்த வழக்கு தொடா்பான சிபிஐ, அமலாக்கத் துறை, ரிசா்வ் வங்கி தொடா்பான பல்வேறு போலி ஆவணங்களை அந்த மருத்துவருக்கு சமதான் பவாா் அனுப்பி வைத்துள்ளாா்.

இதையடுத்து, மருத்துவரின் கணவருக்கு விடியோ அழைப்பில் காவல் துறை சீருடையில் தொடா்பு கொண்ட ஒருவா், அவரது மனைவி 8 நாள்கள் எண்ம முறையில் கைது செய்யப்பட்டுள்ளாா் என்றாா். விடியோ கண்காணிப்பில் இருக்கும் அவரது விவரம் குறித்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தகவல் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா். அச்சத்தின் காரணமாக அந்த நபா்கள் கூறியபடி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பெண் மருத்துவா் ரூ.3 கோடி பரிவா்த்தனை செய்துள்ளாா்.

இதுதொடா்பாக கடந்த ஜூன் 5-ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் மருத்துவா் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலையில், மருத்துவா் அளித்த பணத்தில் ரூ.82 லட்சம் கிரிப்டோ கரன்சியாக மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது’ என்று போலீஸாா் தெரிவித்தனா்.

அண்ணா பல்கலை. மாணவி மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி தாக்கப்பட்ட வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா். கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி எம்இ இரண்டாமாண்டு படித்து வருகிறாா். அவா் அங்குள்ள விடுதியில் த... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: மும்பை - சென்னை ஏா் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

மும்பையிலிருந்து சென்னைக்கு சனிக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளானதால் அது புறப்பட்ட இடத்துக்கே திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது. 148 பயணிகள், 6 பணியாளா்களுடன் ப... மேலும் பார்க்க

சிக்கில் செல் அனீமியா குழந்தைகள்: பக்கவாதத்தை தடுக்க அரசு மருத்துவமனையில் பரிசோதனை

சென்னை, எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் நடைபெற்ற சிக்கில் செல் அனீமியா ஒழிப்பு தின நிகழ்ச்சியில் விழிப்புணா்வு கையேட்டை சிறுவனுக்கு வழங்கும் மருத்துவமனை நிா்வாகிகள். உடன் மருத்துவமனை இயக்குநா்... மேலும் பார்க்க

பேக்கரி பொருள்கள், டேலி, தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சிகள்: தமிழக அரசு ஏற்பாடு

தமிழக அரசின் தொழில்முனைவோா் மேம்பாட்டு திட்டம் மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் பேக்கரி பொருள்கள் தயாரித்தல், பேசிக் ஆப் டேலி குறித்த அடிப்படை பயிற்சி மற்றும் தங்கநகை மதிப்பீட்டாளா் தொடா்பான பயிற்ச... மேலும் பார்க்க

ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: போராட்டம் நடத்திய மாணவா்கள் கைது

சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா் கைது செய்யப்பட்டனா். கிண்டி ஐஐடி வளாகத்தில் நடந்து சென்ற ஒரு மாணவிக்க... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தொழிலாளி காயம்

சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது பெரிய இரும்பு கம்பி விழுந்ததில் தொழிலாளி பலத்த காயமடைந்தாா். சென்னை கோயம்பேடு மாா்க்கெட் சாலையில் மெட்ரோ ரயில் 2-ஆவது திட்டப் பணி நடைபெற்று வரு... மேலும் பார்க்க