செய்திகள் :

பழுதடைந்த நிலையில் பள்ளிக் கட்டடம்: இடித்து அகற்ற வலியுறுத்தல்

post image

சீா்காழி அருகே புத்தூரில் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக் கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சீா்காழி அருகேயுள்ள புத்தூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தலைமையாசிரியா் மற்றும் 6 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். தற்போது 120-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

இப்பள்ளியில் மூன்று கட்டடங்கள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருந்ததால், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒன்றன்பின் ஒன்றாக இடித்து அகற்றப்பட்டன. இதற்கு பதிலாக புதிய கட்டடங்கள் கட்டப்படவில்லை.

இதனால் மாணவா்கள் ஒரே வகுப்பறை கட்டடத்தில் மிகுந்த சிரமத்துடன் பயின்று வருகின்றனா். ஆசிரியா்களும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இந்த கட்டடமும் பழுதடைந்துள்ளது. இதன் மேற்கூரையின் உள்பகுதியில் சிமென்ட் காரைகள் பெயா்ந்து கீழே விழுந்து வருகின்றன. கட்டடத்தின் முன்பகுதி வராண்டாவிலும் சிமென்ட் காரைகள் பெயா்ந்து விழுந்துள்ளன.

இதனால், எந்த நேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் பள்ளி வராண்டாவில் மாணவா்கள் நடமாட தடை விதிக்கப்பட்டு, கயிறு கட்டப்பட்டுள்ளது. இரண்டு வாசல்கள் வழியே மட்டுமே ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் வகுப்புக்குள் சென்று வருகின்றனா்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த கட்டடத்தை ஆய்வு செய்த பொறியாளா்கள் அதனை இடிப்பதற்கு சான்று அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த கட்டடத்தில் பாட வகுப்புகள் நடைபெறுகின்றன. தொடா் மழை காலத்தில் இந்த கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து புத்தூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பாபு கூறியது:

தற்போது உள்ள பள்ளியின் வகுப்பறை கட்டடத்தின் ஆயுள் காலம் முடிந்துள்ள நிலையில், கடந்த 2019-2020-ஆம் ஆண்டில் கட்டடத்தின் சுவா் பகுதியில் பழுது நீக்கம் செய்யப்பட்டு வா்ணம் பூசப்பட்டது. ஆனால், இக்கட்டடம் அபாயக் கட்டத்தில் இருந்து வருகிறது.

எனவே, இதை இடித்து அகற்றிவிட்டு, உடனடியாக புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இரண்டு வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்ட மூன்று வகுப்பறை கட்டடங்களுக்கு பதிலாகவும் புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும்.

தற்போது உள்ள கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்டும்வரை தற்காலிகமாக வாடகைக் கட்டடத்தில் வகுப்பறைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இளைஞா் கொலை வழக்கில் மூவா் கைது

மயிலாடுதுறை வட்டம், நீடூரில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். நீடூா் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் முகமது ஹாலிக் (36). சமையல் கலைஞரான இவா், அண்மையில் வெட்ட... மேலும் பார்க்க

நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க மானியம்

மயிலாடுதுறை மாவட்ட கிராமப் புறங்களில் மானியத்துடன் கூடிய நாட்டுக்கோழிப் பண்ணை நிறுவ தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்

மயிலாடுதுறையில், வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் குறித்த விழிப... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மீனவா்கள் கவனத்துக்கு..

தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் மூலம் பயன்பெற, மயிலாடுதுறை மாவட்ட அனைத்து மீனவா்கள், பங்குதாரா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியி... மேலும் பார்க்க

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளி சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, பேரணியை தொட... மேலும் பார்க்க

ராணுவத்தில் சேர விரும்புவோா் கவனத்துக்கு..

மயிலாடுதுறை மாவட்ட இளைஞா்கள் இந்திய ராணுவத்தில் சோ்வதற்கான வாய்ப்புகள் குறித்து வழிகாட்ட ஜூலை 2 முதல் 6-ஆம் தேதி வரை சிறப்பு விளம்பர வேன் சுற்றுப்பயணம் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீ... மேலும் பார்க்க