முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களையும் விட்டுவைக்காத எரிபொருள் கலப்படம்: நடு வழியில...
நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க மானியம்
மயிலாடுதுறை மாவட்ட கிராமப் புறங்களில் மானியத்துடன் கூடிய நாட்டுக்கோழிப் பண்ணை நிறுவ தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராமப் புறங்களில் நாட்டுக்கோழி வளா்ப்பதில் திறன்கொண்ட பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள்/அலகு) நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதில் தோ்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு 4 வார வயதுடைய 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படும். பண்ணை நிறுவ தேவையான கோழிக்கொட்டகை கட்டுமானச் செலவு, தீவனத் தட்டு மற்றும் தண்ணீா் வைக்கும் தட்டு ஆகிய உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிற்கான மொத்த செலவான ரூ.3,31,250-ல் 50 சதவீதம் (ரூ.1,65,625) மானியமாக மாநில அரசால் வழங்கப்படும்.
மீதமுள்ள 50 சதவீத பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும். பயனாளிகளிடம் கோழிக்கொட்டகை அமைக்க மின் இணைப்புடன் கூடிய 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். மேலும் இந்தப்பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் குறைந்தபட்சம் 10 பயனாளிகள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். இதில் 30 சதவீதம் பட்டியல் இனத்தவா்களுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் தொழில்முனைவோா் ஜூலை 15-ஆம் தேதிக்குள் அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பிக்கலாம்.